மருத்துவமனையில் நடராஜன் திடீர் அனுமதி; மீண்டும் பரோல் கோரும் சசிகலா!

natarajan - 2026

சென்னை: ம.நடராஜன் மீண்டும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப் பட்டார்.

இதனிடையே அவரது உடல் நலம் குறித்து நேற்று பரவிய தகவல்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், மதிமுக., பொதுச் செயலர் வைகோ, திடீரென நேற்று இரவு மருத்துவமனையில் நடராஜனை சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றார். ஆனால், மருத்துவர்கள் அவர் உறக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து இரவு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் ரீதியான கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், நீண்ட நாள் நண்பர் என்பதால் காண வந்ததாகவும், ஆனால் அவர் தூக்கத்தில் இருந்ததாகவும் கூறினார்.

vaikko natarajan - 2026

இந்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் வெளியே வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனைப் பார்க்க சசிகலா சிறை விடுப்பு கேட்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் திங்கள் கிழமை நாளை பரோல் தாக்கல் செய்ய உள்ளார் என்று கூறப் படுகிறது. ஏற்கெனவே கடந்த அக்டோபரில், உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த தனது கணவரைப் பார்க்க சசிகலா பரோலில் வெளியே வந்து ஆறு நாட்கள் சென்னையில் இருந்தார். அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன் அப்போது சிறை நிர்வாகம் பரோல் அளித்தது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories