நாட்டை ஆட்டிப் படைக்கும் பலவீனங்கள்; மரபுகளின் பலத்தால் முறியடிப்போம்: யுகாதி வாழ்த்தில் மோடி!

pm modi - 2026

இன்று விக்ரம வருடம் 2075 பிறப்பதை ஒட்டி நாட்டு மக்கள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார் மோடி. தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ள மோடி, தெலுங்கு, கன்னட மக்கள் கொண்டாடும் புத்தாண்டான யுகாதி உள்ளிட்ட புது வருடப் பிறப்பை ஒட்டியும் அம்மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடீ பட்வா என மகாராஷ்டிரத்தில் இன்று புத்தாண்டு பிறக்கிறது. இதற்கு மராட்டிய சகோதர சகோதரிகளுக்கு தனது புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ள மோடி, கனவுகளும் ஆசைகளும் நிறைவேறும் என நம்புவதாகக் கூறியுள்ளார்.

 

மணிப்பூர் மக்கள் கொண்டாடும் சஜிபு செய்ரோபா எனும் புத்தாண்டு வருடப் பிறப்பை முன்னிட்டு, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அமைதியும் வளர்ச்சியும் வரும் ஆண்டில் திகழட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு, கன்னட மக்கள் இன்று யுகாதி பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு தில்லியில் இருந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

யுகாதி என்றால் புதுயுகத்தின் தொடக்கம் என்று கூறிய மோடி, யுகாதியின் பெருமைகளைப் பட்டியலிட்டார். புண்ணியத் தலமான ஸ்ரீசைலத்துக்கு வருபவர்கள் அனைத்துக் கட்டுகளிலிருந்தும் விடுபட்டு மேன்மை பெறுவார்கள் என வேதவியாச மகரிஷி கூறியுள்ளார் என்றார்.

மேலும், நம் நாட்டை உள்நாட்டு பலவீனங்களில் இருந்து முக்தி அடைய வைக்க நாட்டு மக்கள் விரும்புகின்றனர். சாதி, மதம் மட்டுமின்றி வேறுபல பலவீனங்களும் நாட்டை ஆட்டிப் படைக்கின்றன. நமது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் சேதப்படுத்த நடத்தப்பட்ட முயற்சிகளை நாம் நமது மரபுகளின் பலத்தால் கடந்து வந்திருக்கிறோம் என்று பேசினார் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories