‘மலேசிய பாம்பு காதலன்’ விஷப் பாம்பு கடித்து மரணம் !

malaysian snake whishperer - 2026

பெடாலிங் ஜெயா:

மலேசிய பாம்புக் காதலன் என்று பட்டப் பெயர் சூட்டப்பெற்ற 33 வயது இளைஞர் அபு ஜரின் ஹுசைன், விஷப் பாம்பு கடித்தே மரணத்தைத் தழுவினார். இவர் பாம்பு பிடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவர், தீயணைப்புத் துறையில் பணியாற்றி வந்தவர்.

அபு ஜரின், வெள்ளிக்கிழமை நேற்று காலை 12.40 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது. இவர், கடந்த மார்ச் 12ம் தேதி ஓர் இடத்தில் பாம்பு பிடிக்கப் போய், விஷம் கக்கும் நாகத்தால் தாக்குண்டு, உடனடியாக சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துவிட்டார்.

மலேசிய நாட்டின் கோலாலம்பூரில் உள்ள டெமர்லோ தீயணைப்பு நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றியவர் அபு ஜாரின் ஹுசைன். இவர் மலேசியாவின் பிரபல நபராக மட்டுமல்ல, சில பிரபலமான இணையதளங்களில் பேட்டி காணப்பட்டும், பிரிட்டிஷ் இதழான டெய்லி மிரர் மற்றும் தி டெய்லி மெயிலில் நேர்காணப் பட்டும் இவரைக் குறித்த கட்டுரைகள் வந்ததால், உலகில் பல இடங்களிலும் பிரபலமாகிவிட்டார்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

தீயணைப்புத் துறையில் மட்டுமல்லாமல், பாம்புகள் எங்காவது இருக்கிறது என்று செல்போனில் தகவல் கிடைத்தால் போதும், உடனே அங்கு விரைந்து சென்று பாம்புகளைப் கொல்லாமல், அவற்றைப் பாதுகாப்பாகப் பிடித்து வந்து உயிரியல் பூங்காவில் விட்டுவிடுவார். தான் விடுமுறையில் இருந்தாலும் கூட யாரேனும் பாம்பு பிடிக்க அழைத்தால் உடனே அதை தன் முக்கியக் கடமையாகச் செய்து மக்களுக்கு இலவசமாக இந்த சேவையை செய்து வந்தார்.

ஹுசைன் இதனாலேயே மக்கள் மத்தியில் ‘பாம்பு காதலன்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். மிகக் கொடிய விஷம் கொண்ட ராஜ நாகம், விஷம் கக்கும் நாகம், மாம்பா எனப்படும் ஆஸ்திரேலியன் வகை கொடிய விஷப் பாம்புகளை வைத்து ஹூசைன் செய்த சாகசக் காட்சிகள் ஊடகங்களில் மிகப் பிரபலமானவை. பல்வேறு கலை நிகழ்ச்சிகலையும் இந்தப் பாம்புகளை வைத்தே ஹூசைன் நடத்தியுள்ளார்.

ஹூசைனின் வீட்டிலும் சர்வ சாதாரணமாக பாம்புகள் உலா வரும். பாம்புக்கு முத்தம் கொடுப்பது, மூக்கில் பாம்பை நுழைத்து, வாய் வழியாக எடுப்பது, ராஜநாகத்துடன் படுத்து தூங்குவது, அருகில் வைத்துக் கொண்டு புத்தகம் படிப்பது, சாப்பிடுவது என இவரின் வீடியோக்கள் இணைய தளங்களில் அதிகம் உலாவந்தன.

ALSO READ:  கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

ஒரு முறை வெளிநாட்டு பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில், தாய்லாந்தைச் சேர்ந்த நபர், தனது மறைந்து போன காதலியின் நினைவாக, அவர் ஜாடையில் இருப்பதால், தான் செல்லமாக வளர்த்த பாம்பையே திருமணம் செய்து கொண்டார் என்று கூறி அபு ஜாரினின் படத்துடன் தகவல் வெளியானது. ஆனால், அபு ஜாரின் அப்படி எல்லாம் பாம்பைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருடைய படத்தைத் தவறுதலாக அதில் வெளியிட்டு விட்டார்களாம்!

கடந்த மார்ச் 12ம் தேதி ஓர் இடத்தில் விஷம் கக்கும் நாகம் இருப்பதாக இவருக்கு தகவல் வந்துள்ளது. அதைப் பிடிக்கும் முயற்சியில் ஹுசைன் ஈடுபட்டிருந்தபோது, அவரை அந்தப் பாம்பு தீண்டியது. இதனால் மயக்கம் அடைந்தார் ஹுசைன். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். ஆனால், 4 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்தும் மார்ச் 16ம் தேதி வெள்ளிக்கிழமை நேற்று உயிரிழந்தார்.

அவரைக் கடித்த பாம்பின் ஒரு கடி விஷம் ஒரு யானையையே கொல்லும் அளவுக்கு கொடூரமானதாம்! அபு ஜாரின் தன்னுடன் பணியாற்றும் சக பணியாளர்களுக்கும் பாம்பு பிடிக்கும் கலையை கற்றுக் கொடுத்து விழிப்புணர்வூட்டியுள்ளார். அபு ஜாரின் ஹுசைன் பாம்பு பிடிக்கும் கலையை தனது தந்தையிடம் இருந்து கற்றுள்ளார். 2015இல், இதற்கு முன்பும் கூட அவரை பாம்பு கடித்துள்ளதாம். அப்போது இரு நாட்கள் கோமாவில் இருந்து உயிர் பிழைத்தாராம்.

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

பாம்பு கடித்து உயிரிழந்த அபு ஜாரின் ஹுசைனின் உடல், அவரது சொந்த ஊரான கெலாண்டன் நகரில் உள்ள பசிர் புதி, கெம்பங் பெர்மடாங் காடிங்கில் சனிக்கிழமை இன்று அடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories