உதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் கரடி தாக்கியதில், மாதி என்ற பெண் உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது கணவர் ஹாலன் கரடியால் மோசமாகத் தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் கரடி தாக்கி கணவன் – மனைவி இருவருமே உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, அந்த ஆட்கொல்லி கரடியைப் பிடிக்க, வனத்துறை மயக்க ஊசியுடன் தேடியது. ஆனால், மயக்க ஊசிக்கு கரடி அகப்படாமல் தப்பியதால், கரடி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டது. இதனிடையே அந்தக் கரடி உலவிய கோத்தகிரி தேயிலைத் தோட்டப் பகுதியில் மேலும் ஒரு பெண் கரடி உலவுவதாக கிராமத்தினர் தகவல் தெரிவித்தனர். அதனைப் பிடித்து வெளியே கொண்டு செல்ல தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இதை அடுத்து, கரடியை உயிரோடு பிடிக்க 3 இடங்களில் வனத்துறையினர் கூண்டுகளை வைத்துள்ளனர். இருப்பினும் கரடி இன்னும் அவற்றில் அகப்படவில்லை. இதனால் கோத்தகிரி – குன்னூர் சாலையில் பொதுமக்கள் பயத்துடனேயே நடமாடுகின்றனர்.
கரடி தாக்கிய மேலும் ஒருவர் மரணம்: இன்னொரு கரடியைப் பிடிக்க தீவிரம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari