January 18, 2025, 5:33 AM
24.9 C
Chennai

கரடி தாக்கிய மேலும் ஒருவர் மரணம்: இன்னொரு கரடியைப் பிடிக்க தீவிரம்

SAMSUNG DIGITAL CAMERA உதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் கரடி தாக்கியதில், மாதி என்ற பெண் உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது கணவர் ஹாலன் கரடியால் மோசமாகத் தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் கரடி தாக்கி கணவன் – மனைவி இருவருமே உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, அந்த ஆட்கொல்லி கரடியைப் பிடிக்க, வனத்துறை மயக்க ஊசியுடன் தேடியது. ஆனால், மயக்க ஊசிக்கு கரடி அகப்படாமல் தப்பியதால், கரடி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டது. இதனிடையே அந்தக் கரடி உலவிய கோத்தகிரி தேயிலைத் தோட்டப் பகுதியில் மேலும் ஒரு பெண் கரடி உலவுவதாக கிராமத்தினர் தகவல் தெரிவித்தனர். அதனைப் பிடித்து வெளியே கொண்டு செல்ல தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இதை அடுத்து, கரடியை உயிரோடு பிடிக்க 3 இடங்களில் வனத்துறையினர் கூண்டுகளை வைத்துள்ளனர். இருப்பினும் கரடி இன்னும் அவற்றில் அகப்படவில்லை. இதனால் கோத்தகிரி – குன்னூர் சாலையில் பொதுமக்கள் பயத்துடனேயே நடமாடுகின்றனர்.

ALSO READ:  ராஷ்டிரீய ஹிந்து மகா சபா நடத்திய மஹா சண்டி யாகம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை