ஹைதராபாத்தில் நடைபெற்ற… ‘கல்வியில் மாற்றங்கள்’ நிகழ்ச்சியில் எஸ்.குருமூர்த்தி பேச்சு!

Published:

remorms in education - 2026

பண்பாடு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளை (IMCTF) Initiative for Moral and Cultural Training Foundation நேற்று மார்ச் 2ம் தேதி ஹைதராபாத் நாம்பள்ளி பொருட்காட்சி மைதானம் காந்தி நூற்றாண்டு அரங்கில் ‘கல்வியில் மாற்றங்கள்’ என்ற தலைப்பில் சிறப்பான நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி வருகை தந்து சிறப்புரையாற்றினார்.

ஐஎம்சிடிஎஃப் என்னும் அமைப்பு ஆறு அடிப்படை நோக்கங்களை முன்னிறுத்தி நகர்கிறது. வனம் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு, ஜீவராசிகளைப் பேணுதல், சுற்றுச்சூழல் பராமரிப்பு, பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப் பற்றை உணர்த்துதல் என்னும் உயர்ந்த கலாச்சாரத்தை பள்ளி மாணவர்களிடையே நினைவுபடுத்துவது இதன் முக்கிய நோக்கம்.

நேற்று மாலை 6 மணி அளவில் திரு குருமூர்த்தி அவர்கள் இது குறித்து விளக்கமாக ஒரு மணி நேரம் மிகச் சிறப்பாக உரையாற்றினார்.

imctf - 2026

சென்னை நகரம் மற்றும் சுற்றுப்புறங்களில் தற்போது 300 பள்ளிகளுக்கு மேல் ஐஎம்சிடிஎஃப் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இந்திய கலாச்சார இலக்கியங்கள் பற்றிய போட்டிகள் நடைபெற்றன.

sgurumurthi - 2026

ஒரு லட்சம் மாணவர்களுக்கு மேல் பங்கு கொண்டு நம் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்று ஆச்சாரிய வந்தனம், கோ வந்தனம், கன்யா வந்தனம், மாதாபிதா வந்தனம், வீரர்கள் வந்தனம், வன வந்தனம் போன்ற நிகழ்ச்சிகளில் உற்சாகத்தோடு பங்கு கொண்டனர் என்று தெரிவித்தார். அதன் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி இருந்தது. காந்தி நூற்றாண்டு அரங்கம் நிரம்பி வழிந்தது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஐஎம்சிடிஎஃப் தெலங்காணா கிளை 2019ல் இது குறித்து ஆசிரியர் பயிற்சி முகாம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக ஐஎம்சிடிஎஃப் தெலங்காணா கிளை ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முதல்முதலாக ஹைதராபாத்தில் நடத்தும் முயற்சியில் இருப்பது வரவேற்கத்தக்கது.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத் – 62
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img