மெக்காவில் 710 க்கும் மேற்பட்டோர் பலி : தமிழக சட்டசபையில் மவுன அஞ்சலி

Published:

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் ஒரே நேரத்தில் லட்சகணக்கானவர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டநெரிசலில் சிக்கி 710க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 800 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 14 பேர் மற்றும் காயமடைந்த 13 பேர் இந்தியர்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்து உயிரிழந்தவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு ள்ளது.

உயிரிழந்த 14 பேர் ரின் பட்டியலை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இறந்துள்ளனர்.. அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில், இந்த துயர சம்பவத்தில் பலியானவர்களுக்காக, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த துயர சம்பவத்திற்கு, பல்வேறு தரப்பிலிருந்து இரங்கல் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img