எம்.எல்.ஏ.வுக்கு சரணடைய கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

Published:

 

ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வான சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லீபிகா புகார் அளித்திருந்தார். அதில், தன்னை தன் கணவர் சோம்நாத் பாரதி அடித்து கொடுமைப்படுத்தி வருவதாகவும் ஒருமுறை கொல்ல முயன்றதாகவும் அந்த புகாரில் லீபிகா குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் சோம்நாத் பாரதி முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடியானதால் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவும் தள்ளுபடியானது. எனவே, எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது.

அதன் பிறகும் விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு எதிராக, ஜாமினில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சோம்நாத் பாரதி தலைமறைவாகி விட்டார்

இதற்கிடையில், தன் மீது மனைவி அளித்த புகார் தொடர்பான விசாரணையை குடும்ப சமரச மையத்துக்கு மாற்ற வேண்டும் என்றும், இவ்வழக்கில் போலீசார் தன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் சோம்நாத் பாரதி மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் இன்று மாலைக்குள் போலீசாரிடம் சரணடையும்படி சோம்நாத் பாரதிக்கு உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் முதலில் நீங்கள் சரணடையுங்கள். உங்கள் மனைவியின் புகார் தொடர்பாக குடும்ப சமரச மையத்துக்கு பரிந்துரைப்பது பற்றி பின்னர் முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் , இம்மனு மீதான மறுவிசாரணையை வரும் அக்டோபர் முதல் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

 

 

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img