கேரள கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து தென்காசி அருகே நவ.21ல் ஆர்ப்பாட்டம்!

Published:

police in sabarimala - 2026

தென்காசி: சபரிமலை விவகாரத்தில் கேரள கம்யூனிஸ்ட் அரசு மேற்கொண்டு வரும் அடக்குமுறைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நெல்லை மேற்கு மாவட்ட பாஜக., சார்பில், வரும் நவ.21 புதன்கிழமை அன்று மாலை 3.45 மணி அளவில் தென்காசி அருகே உள்ள மேலகரம் பேருந்து நிலையம் அருகில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடும் கேரள கம்யூனிஸ்ட் அரசு பினராயி விஜயன் நிர்வாகத்தைக் கண்டித்தும், பாரதிய ஜனதா கட்சியின் கேரள நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதைக் கண்டித்தும் ஓர் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐயப்ப பக்தர்கள், இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், பொது மக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக., வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனை நெல்லை மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு தலைவர் பேச்சிமுத்து தெரிவித்தார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img