December 5, 2025, 1:09 PM
26.9 C
Chennai

கிராம மக்களை குறிவைத்து வங்கி கடன் மோசடி! அறிவுறுத்தும் காவல்துறை!

ban fraud e1572323495403 - 2025

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல் தற்போது கிராமத்து மக்களை அதிக அளவில் குறிவைத்து செயல்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரபலமான நிதி நிறுவனங்களில் இருந்து பேசுவதாகக் கூறி தொலைபேசி மூலம் பொதுமக்களை தொடர்பு கொள்ளும் கும்பல் ஒன்று வங்கிகள், நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டிக்கு கடன்பெற்றுத் தருவதாக கூறி வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்களை சேகரித்து அதன்மூலம் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை நூதன முறையில் திருடி வருகிறது.

இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தினர். இதில் வேங்கைவாசல் பகுதியில் போலி கால்சென்டர் அமைத்து வாடிக்கையாளரிகளிம் பேசி நூதனமுறையில் பண மோசடி செய்த விழுப்புரம் மணிகண்டன் உட்பட 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் 5 பேர் பெண்கள். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

rraud - 2025

இது குறித்து வங்கி மோசடி தடுப்பு பிரிவு காவலர் கூறியதாவது: துணிக்கடை, நகைக்கடை, வணிக நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களின் எண்களை இந்த மோசடி குழுவினர் பணம் கொடுத்து பெற்றுக் கொள்கின்றனர்.

அதன் பின்னர், போலி கால்சென்டர் அமைத்து அதில் இனிமையாக பேசும் பெண்களைக் கொண்டு குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாக பொதுமக்களிடம் பேச வைக்கின்றனர். வாடிக்கையாளர்களின் மனநிலைக்கு ஏற்ப தொடர்ந்து இவர்கள் அழைக்கின்றனர். இதில், 20 சதவீதம் பேரின் வங்கி தகவல்களை பெற்று, அடுத்த சில விநாடியே பணத்தை திருடி விடுகின்றனர்.

தற்போது இந்த கும்பல் டெல்லிக்கு இடம் பெயர்ந்து அங்கு போலி கால்சென்டரை அமைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த கும்பல் தமிழகத்தில் குறிப்பாக கிராம மக்களை குறி வைத்து செயல்படுகிறது. இவர்களை விரைவில் கைது செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

hacker - 2025

கடன் வாங்கித் தருவதா கவோ, கிரெடிட் கார்டு லிமிட்டைஅதிகப்படுத்தி தருவதாகவோ, ரிவார்டு பாயின்ட் வந்திருப்பதாகவோ, வேலை வாங்கி தருவதாகவோ கூறினால், தங்களுடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு எண்களையும் ரகசிய குறியீட்டு எண்களையும் தெரிவிக்கக்கூடாது.

மேலும் தனிநபர் ஒருவரின் வங்கிக்கணக்கின் விவரங்களை ஒருவர் கேட்கிறார் என்றாலே அது மோசடிக்காகத்தான் என்பதை மக்கள் உணர வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறையேனும் ரகசிய குறியீட்டு எண்ணை மாற்ற வேண்டும். எந்த இணைய இணைப்பையும் தேவையின்றி பதிவிறக்கம் செய்யக் கூடாது என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories