ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை!

mohanji-bhagavat
mohanji-bhagavat

ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் 1925ம் வருடம் விஜயதசமி நாளில் தொடங்கப் பட்டது. இதனை முன்னிட்டு, ஒவ்வொரு வருடமும் விஜயதசமி நாளில் அந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.

இன்று விஜயதசமி நாள். இன்று நடைபெற்ற விஜயதசமி விழாவில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்க சாலக் (ஆர்எஸ்.எஸ் அகில பாரதத் தலைவர் ) மோகன் பாவகத் நிகழ்த்திய உரையில் அவர் தெரிவித்தவை….

வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவது,  அவர்களுக்கு தங்குமிடம், உணவுவசதி ஏற்படுத்துவது, நோயாளிகளுக்கு மருத்துவ வசதி மற்றும் வீடுகளுக்கே சென்று மருந்துகள் விநியோகிப்பது என்று மொத்த சமுதாயமும் ஒன்றிணைந்து பணியாற்றியது 

பள்ளிகளை திறப்பதற்கும், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவும், குழந்தைகள் கல்விக் கட்டணம் செலுத்தவும் உதவிகள் செய்ய வேண்டும். இடப்பெயர்வால் பலர் வேலையிழந்துள்ளார்கள். வருமானம் குறைந்துள்ள குடும்பங்களில் தற்கொலை,  குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க மனநல ஆலோசனை மற்றும் ஆதரவு அவசியம்.

நமது சமூக கலாச்சார மரபுக்கு எதிராக செயல்படுபவர்கள், தங்களை ஜனநாயகம், மதசார்பின்மை, அரசியல்சாசனம் ஆகியவற்றின் பாதுகாவலர்கள் என்று மக்களை ஏமாற்றியும், வருகிறார்கள். டாக்டர் அம்பேத்கர் இத்தகைய நபர்களின் நடவடிக்கைகளை “grammar of anarchy” என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  ஐபிஎல் - 2026: கலக்கும் இளம்புயல் சூர்யவன்ஷி

பொய்யான வாக்குறுதிகள் வழங்கி, பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் என அழைக்கப் படுவோர் மனதில் வெறுப்புணர்வை தோற்றுவித்து, நம் நாட்டின் பிரிக்க முடியாத அங்கமாகிய பன்முகத் தன்மையை சிதைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.
பாரதீயர்களை பாரதத்தில் இருந்து பிரிக்க முடியாது. மக்களை பிரிக்க நடைபெற்ற அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியிலேயே முடிந்துள்ளன.

பாரதத்தின் ஆன்மா என்பது பலவித நம்பிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளுதல் என்பது, ஹிந்து கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்களின் பிரதிபலிப்பே. சகிப்புத் தன்மை மற்றும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் நமது தத்துவத்தை, சுவாமி விவேகானந்தர், ‘அமெரிக்க சகோதர, சகோதரிகளே’ என்று அமெரிக்காவில் வெளிப்படுத்தினார். இதுவே ஹிந்துத்வம் 

கவிஞர் ரபீந்திரநாத் தாகூர், தனது ஸ்வதேசி சமாஜ்  எனும் கட்டுரையில்,  பாரதத்தின் மறுமலர்ச்சிக்கு சுய உணர்வு கருத்தை முன்னிறுத்தியுள்ளார். ஸ்ரீஅரவிந்தரும்  தனது உரையில் இதை குறிப்பிட்டுள்ளார். இதுவே ஹிந்துத்வம் .

நமது செயல்களின் பலன்கள் அனைத்தும்  சுய கோட்பாட்டை மையப் படுத்தியே அமைய வேண்டும், அப்போது தான் பாரதம் சுயசார்புடைய நாடாகும் . உற்பத்தி தளங்கள், உற்பத்தி பணியாளர்கள், உற்பத்தி உரிமை, விற்பனை உரிமை அனைத்தும்  நம்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் 

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

நம்முடைய விவசாயத்திற்கு நீண்ட வரலாறு  உண்டு. எனவே புதிய கொள்கைகள் நமது விவசாயிக்கு நவீன வேளாண் அறிவியலைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அதனை நம்முடைய காலத்தால் பரிசோதித்த நடைமுறையுடன் இணைப்பதற்கான வழிமுறையையும் கற்றுத்தர வல்லதாக இருக்க வேண்டும். 

நமது விவசாய கொள்கைகளை வடிவமைக்கும்போது நம்முடைய விவசாயிகள் தங்களுடைய விதைகளைசேமிக்கவும், உரங்களையும் உரங்களையும் தாங்களாகவே தயாரிக்கும் அல்லது அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வாங்கவும் தயார்படுத்த வேண்டும். 

வாரத்தின் ஏதாவது ஒரு நாள் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்து, வீட்டில் செய்த உணவை ஒன்றாக சாப்பிட்டு பிறகு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் சகஜமாக உரையாடலாம்.

சுதேசியின் சாத்தியக் கூறுகளை ஆராய்வதில் “Vocal for local ” ஒரு சிறந்த தொடக்கமாகும். வீட்டில் தோட்டம் வளர்ப்பது, பிற ஜாதி, மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர்களோடு நாம் சகஜமாக பழகுகிறோமா, சமூக நல்லிணக்கத்திற்கு என்ன செய்யலாம், சுற்றுச்சூழலை எவ்வாறு மேம்படுத்தலாம் போன்றவற்றை குடும்பத்திற்குள் விவாதிக்கலாம்

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

சின்ன சின்ன விஷயங்களின் மூலம், ஒற்றுமை, நேர்பட செயல்படுதல், பொறுமை, கட்டுப்பாடு மற்றும் மூல்யங்கள் செறிந்த தனி மனித சுபாவத்தை உருவாக்கலாம். நமது கூட்டு அணுகுமுறையும், சமுதாய கண்ணோட்டமும், ஒற்றுமைக்கும், அமைதிக்கும் வழிவகுக்கும்.

நமது பொருளாதாரம், வேளாண்மை, தொழிலாளர்கள் நலம், உற்பத்தி மற்றும் கல்விக்கொள்கையில் சுயசார்பு நோக்கி செல்லக் கூடிய திசையில் சில சாதகமானநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

ஸ்வயம்சேவகர்கள் தன்னலமில்லாமலும் ஈடுபாட்டுடனும் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.  உங்கள் அனைவரையும் அவர்களுடன் சேர்ந்து பணி புரிய அழைத்து எனது உரையை முடித்துக் கொள்கிறேன்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories