முகத்தில் காயங்கள்! சின்னத்திரை நடிகை சித்ரா கொலையா?

vjchitra-1
vjchitra-1

இன்று காலை சென்னையில் தனியார் விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் இரு இடங்களில் காயங்கள் உள்ளதாகவும் எனவே இது தற்கொலையா அல்லது கொலையா என்று இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆக அறிமுகமாகி பின்னர் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வந்தவர் சின்னத்திரை நடிகை விஜே சித்ரா. 29 வயதாகும் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். 

இந்த தொடரின் படப்பிடிப்பு சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம் சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடிப்பதற்காக அருகிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்து படப்பிடிப்புக்கு சென்று வந்தார் சித்ரா 

இந்நிலையில் நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஓட்டலில் இன்று அதிகாலை திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் செய்தி சின்னத்திரை நடிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

விஜே சித்ராவுக்கு 4 மாதம் முன்  தொழிலதிபர் ஹேம்நாத் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. கொரோனா கால நெருக்கடிகளால் வரும் ஜனவரி மாதத்திற்கு திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்! 

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

ஹேம்நாத் உடன் தனியார் விடுதியில் தங்கி இருந்த சித்ரா, இன்று அதிகாலை 2.30 மணி அளவில் படப்பிடிப்பு முடிந்து விடுதி அறைக்கு திரும்பி உள்ளார்.அப்போது தான் குளிக்கப் போவதாகவும் அதுவரை சற்று வெளியில் காத்திருக்குமாறும் ஹேம்நாத்திடம் கூறி அவரை வெளியே அனுப்பிவிட்டு, உள்ளே அவர் கதவை பூட்டிக் கொண்டதாகக் கூறப் படுகிறது.  

ஆனால் வெகு நேரமாகியும் பூட்டிய கதவு திறக்கப்படாததால் ஹேம்நாத் கதவை தட்டியுள்ளார் பிறகு விடுதி ஊழியர்களிடம் கூறி, மாற்று சாவி கொண்டு கதவைத் திறந்து பார்த்தபோது மின்விசிறியில் நைட்டி அணிந்த நிலையில், சித்ரா தூக்கில் தொங்கினார்.

chitra-actress1
chitra-actress1

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் விஜயராகவன் விடுதிக்கு விரைந்து விசாரணை நடத்தினார் சித்ராவின் உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

தகவல் கிடைத்து விரைந்து வந்த சித்ராவின் பெற்றோர் கதறி அழுதனர் அப்போது சித்ரா அவ்வளவு மன வலிமை குறைந்தவர் இல்லை என்றும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர்கள் கூறினர் 

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

இதனிடையே, தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் இரு இடங்களில் காயங்கள் உள்ளதாகவும்,  வலது பக்க கன்னத்திலும், நாடி பகுதியிலும் காயங்கள் உள்ளதாகவும் கூறப் பட்டது.  

e0ae9ae0aebfe0aea9e0af8de0aea9e0aea4e0af8de0aea4e0aebfe0aeb0e0af88-e0aea8e0ae9fe0aebfe0ae95e0af88-e0ae9ae0aebfe0aea4e0af8de0aeb0e0aebe

சித்ரா தற்கொலை செய்து கொண்ட போது,  ஹேம்நாத் மட்டுமே உடன் இருந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சித்ராவின் கன்னத்தில் இருந்த காயங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்

சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஹேம்நாத்திடம் கருத்து வேறுபாடு காரணமாக தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்தும் ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories