கின்னஸ் ரெக்கார்டு புக்கில் சேர இருக்கும் குண்டூர் சிறுமி!

Published:

IMG 20210327 WA0022 - 2026

கின்னஸ் ரெக்கார்டு புக்கில் சேர இருக்கும் குண்டூர் சிறுமி.

அற்புதமான திறமையை வெளிப்படுத்திய ஒன்பது வயது சிறுமி கின்னஸ் உலக ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெறப் போகிறார்.

குண்டூர் மாவட்டம் சிலகலூரிபேட்டையை சேர்ந்த ஒன்பது வயது ஃபசீலா தபஸ்ஸும் என்பவர் ஆவர்த்தன பட்டியல் எனப்படும் கனிம மூலகங்களின் அட்டவணையை மிகக் குறைந்த நேரத்தில் அமைத்து கின்னஸ் புத்தக பிரதிநிதிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். விரைவிலேயே இந்த சிறுமியின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

இதுவரையிலேயே இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இவர் இடம்பெற்றுள்ளார்.

குண்டூர் எம்எல்ஏ விடதல ரஜினியின் முன்னிலையில் 1.27 நிமிடங்களிலேயே தனிம மூலகங்களை அமைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் ஃபசீலா. இதுதொடர்பாக சிறுமியை எம்எல்ஏ பாராட்டினார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img