ஊழலில் தொடர்புடையவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு….!

mdu hig court 1 - 2026

லஞ்சம், ஊழலில் தொடர்புடையவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன், தன்னை பணியிட மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணி பிறப்பித்த பரபரப்பு உத்தரவு வருமாறு:-

நாட்டில் லஞ்சம், ஊழல் அதிகரித்துவிட்டது. இதை தடுக்க வேண்டும். லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க முடியாது. ஆனால் குறைக்க முடியும்.

அதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். அரசுத்துறை அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டபோதும் லஞ்சம் குறையவில்லை.

லஞ்சம், ஊழலில் தொடர்புடையவர்களை இரும்பு இதயம், இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

ஆனால் லஞ்சம் புழங்கும் இடங்களை கண்டறியவும், லஞ்சம் வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் தயாராக இல்லை.

மதுரை மாநகராட்சியில் லஞ்சம் வாங்குவது அதிக அளவில் உள்ளது.

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

மாநகராட்சி ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு மதுரை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்பு பிரிவை பலப்படுத்த வேண்டும்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அலுவலகங்கள், மாநகராட்சி கட்டிடங்களில் லஞ்ச ஒழிப்பு மையங்களை 4 வாரத்தில் திறக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் மாநகராட்சி அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும்.

பொதுமக்கள் மாநகராட்சி ஊழல் தொடர்பாக இந்த மையங்களில் புகார் அளிக்கலாம்.

லஞ்ச ஒழிப்பு மையங்கள் மாநகராட்சி கமிஷனரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும்.

மாநகராட்சி அலுவலகங்கள், கட்டிடங்களில் லஞ்சம் வாங்குவது, கொடுப்பது சட்டவிரோதம் என பலகைகள் வைக்க வேண்டும்.

லஞ்ச ஒழிப்புப்பிரிவில் சோதனைக்காக ரகசிய குழுவை அமைக்க வேண்டும்.

மதுரை மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் பெயரில், குடும்பத்தினர் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட வேண்டும்.

விவரம் பெறப்பட்டதும் அதை ஆய்வு செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

திட்டப்பணிகளில் முறைகேடுகளை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு பிரிவில் சிறப்பு குழு அமைக்க வேண்டும்.

இந்தக்குழு திட்டப்பணிகளை ஆய்வு செய்து முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர், செயற்பொறியாளர், மண்டல அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நடைமுறையை 12 வாரத்தில் முடிக்க வேண்டும்.

மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி கமிஷனர் அடையாளம் காணவும், அவற்றை மீட்கவும், அந்த இடங்களில் இருப்பவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்க 4 வாரத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories