இங்கிலாந்தில் 3 நீதிபதிகளும் நீதிமன்ற பதிவாளர் ஒருவரும் தங்களது அதிகாரபூர்வ கம்ப்யூட்டரில் ஆபாசப் படம் பார்த்ததாக புகார் எழுந்தது. மாவட்ட நீதிபதி டிமோத்தி பவுல்ஸ், குடியேற்றப் பிரிவு நீதிபதி வாரன் கிரான்ட், மாவட்ட துணை நீதிபதி பீட்டர் புல்லக், பதிவாளர் ஆன்ட்ரூ மாவ் ஆகியோர் இந்தப் புகாரில் சிக்கினர்.இவர்கள் மீது நீதிபதிகளின் நடத்தை தொடர்பான விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் நான்கு பேரும் ஆபாசப் படம் பார்த்தது உறுயானது. இதையடுத்து, 3 நீதிபதிகளும் நீக்கப் படுவதாக விசாரணைக் குழு அறிவித்துள்ளது. ஆனால், விசாரணை முடிவடைவதற்கு முன்பே பதிவாளர் ஆன்ட்ரூ மாவ் ராஜினாமா செய்து விட்டார். ஆயினு, நான்கு பேரும் குழந்தைகளின் ஆபாசப் படத்தையோ, சட்ட விரோதமானதையோ பார்க்கவில்லை என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர்கள் செய்ததுமன்னிக்க முடியாதது என்றும் அந்த விசாரணைக் குழு கூறியுள்ளது.
Popular Categories