இங்கிலாந்தில் 3 நீதிபதிகளும் நீதிமன்ற பதிவாளர் ஒருவரும் தங்களது அதிகாரபூர்வ கம்ப்யூட்டரில் ஆபாசப் படம் பார்த்ததாக புகார் எழுந்தது. மாவட்ட நீதிபதி டிமோத்தி பவுல்ஸ், குடியேற்றப் பிரிவு நீதிபதி வாரன் கிரான்ட், மாவட்ட துணை நீதிபதி பீட்டர் புல்லக், பதிவாளர் ஆன்ட்ரூ மாவ் ஆகியோர் இந்தப் புகாரில் சிக்கினர்.இவர்கள் மீது நீதிபதிகளின் நடத்தை தொடர்பான விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் நான்கு பேரும் ஆபாசப் படம் பார்த்தது உறுயானது. இதையடுத்து, 3 நீதிபதிகளும் நீக்கப் படுவதாக விசாரணைக் குழு அறிவித்துள்ளது. ஆனால், விசாரணை முடிவடைவதற்கு முன்பே பதிவாளர் ஆன்ட்ரூ மாவ் ராஜினாமா செய்து விட்டார். ஆயினு, நான்கு பேரும் குழந்தைகளின் ஆபாசப் படத்தையோ, சட்ட விரோதமானதையோ பார்க்கவில்லை என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர்கள் செய்ததுமன்னிக்க முடியாதது என்றும் அந்த விசாரணைக் குழு கூறியுள்ளது.
ஆபாசப் படம் பார்த்த நீதிபதிகள் 3 பேர் நீக்கம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

