December 17, 2025, 1:37 PM
28.3 C
Chennai

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் இந்த்ரதனுஷ் இயக்கத்தின் கீழ் தேர்வு

சென்னை: தமிழ்நாட்டில் கோயம்பத்தூர், காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய எட்டு மாவட்டங்களில் மத்திய அரசு இந்திரதனுஷ் இயக்கம் – 201 கீழ் தேர்வு செய்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதை இடையில் நிறுத்திய அல்லது தடுப்பூசியே போடாத குழந்தைகளை அதிக அளவில் கொண்டுள்ள 28 மாநிலங்களின் 201 மாவட்டங்கள் முதல் கட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இந்த இயக்கத்தின் முதல் கட்டமாக மார்ச் 2015 முதல் ஜூன் 2015 வரை நான்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளும் கர்பிணி பெண்களும் இதன் கீழ் பயன் அடைவர். முதன்மை சுகாதார செயலரின் தலைமையின் கீழ் நோய் தடுப்பிற்கான மாநில செயல்படை மாவட்டங்களில் இந்த இயக்கத்தின் வளர்ச்சியை கண்காணித்து உதவும். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் முதன்மை சுகாதார செயலர் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கானொலி காட்சி மூலம் இது குறித்து விளக்குவர். இதன் பிறகு வருங்கால முகாமிற்கான தயார் நிலைக் குறித்து மறு ஆய்வு கானொலி காட்சி நடைப்பெறும். மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் நோய் தடுப்பிற்கான மாவட்ட செயல்படை வட்டங்கள் / நகர்ப்புற பகுதிகளில் இந்த இயக்கத்தின் வளர்ச்சியை கண்காணித்து, உதவும். தலைமை சுகாதார அலுவலர் தலைமையில் அனைத்து வட்டார சுகாதார அலுவலர்கள்  திட்டமிடுதல் மற்றும் அறிக்கை செயல்பாடு குறித்த மாவட்ட அளவிலான தயார் நிலைக் கூட்டம் நடைபெறும். வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையின் கீழ் நோய் தடுப்பிற்கான வட்டார செயல்படை வட்டாரங்களில் இந்த இயக்கத்தின் வளர்ச்சியை கண்காணித்து உதவும். அங்கன்வாடி, ஆஷா சகோதரிகள் போன்ற சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 2014ல் இந்தியாவின் நோய் தடுப்பு சதவீதம் 65 சதவீதமாக இருந்தது. இதனை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 90 சதவீதமாக மாற்றுவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். தடுப்பூசி போட்டுக் கொள்வதை இடையில் நிறுத்திய அல்லது தடுப்பூசியே போடாத குழந்தைகள், குழந்தைப் பருவ நோய், ஊனம், மரணம் வரும் தருவாயில் உள்ள குழந்தைகள் ஆகியோர் இந்திராதனுஷ் இயக்கத்தின் சிறப்பு நோய் தடுப்பு முகாம்கள் மூலம் பயன்பெறுவர். தொண்டை தொற்று நோய், கக்குவான் இருமல், டெட்டனஸ், காசநோய், போலியோ, அம்மை, மஞ்சள்காமாலை ஆகிய ஏழு உயிர் கொல்லி நோய்களுக்கு இந்திரதனுஷ் இயக்கத்தின் கீழ் தடுப்பூசி போடப்படும். கூடுதலாக, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், இமோபிளஸ் இன்புளுன்சா பி நோய்களுக்கு நாட்டின் தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்கள் / மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்படும். கர்பிணி பெண்களுக்கு டெட்டனஸ்கான தடுப்பூசியும் போடப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – டிச.17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் திமுக., அரசு; இந்து முன்னணி கண்டனம்

தமிழக முதல்வர் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் விடுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!

அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

Topics

பஞ்சாங்கம் – டிச.17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் திமுக., அரசு; இந்து முன்னணி கண்டனம்

தமிழக முதல்வர் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் விடுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!

அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சங்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டலபூஜை நாளை தொடக்கம்!

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா...

கொத்தலு: இராஜபாளையம் ராஜூக்களின் பாரம்பரியம்!

ஒவ்வொரு சாதி தலைவர்களும் இது போல பின்பற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது, அதுவும் இந்த காலகட்டத்தில் மிக அவசியம் கூட! 

Entertainment News

Popular Categories