பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

tn gov rn ravi hitting parai in virudhunagar - 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பத்மஸ்ரீ வேலு ஆசான் துவங்கியுள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தை பறை இசைத்து திறந்து வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி… பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள ஆளுநர் பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டுமலையில் ஆளுநர் விருப்ப நிதியில்
பத்ம ஸ்ரீவேலு ஆசானுக்கு புதிய குடியிருப்புடன் கூடிய பாரதி பறை பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பண்பாட்டு மையத்தை தமிழக ஆளுநர் R.N.ரவி திறந்து வைத்து பறை இசை கருவிகளை பார்வையிட்டார்.
முன்னதாக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு காவல்துறை மரியாதையும் அதனை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பறை இசை கலைஞர்கள் பறை இசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது ஆளுநருக்கு பத்ம ஸ்ரீ வேலு ஆசான் பறை இசைத்து வரவேற்றார். அப்போது வேலு ஆசானிடமிருந்து பறையை வாங்கிய ஆளுநர் ரவி உற்சாகத்துடன்
பறை இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் நடைபெற்ற விழாவில் பறை இசை கலைஞர்கள், மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்களான பிரபலம், கலைமாமணி மதிச்சியம் பாலா, சின்னப்பொண்ணு, செந்தில் ,ராஜலட்சுமி, அந்தோனி ஆகியிரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தொடர்ந்து பத்மஸ்ரீ வேலு வாசன் பறை இசை கலையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்வமுடன் பார்த்து ரசித்தார்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது அவருக்கு மட்டுமல்ல இந்த பறை இசைக்கலையுக்கே கிடைத்த விருது எனவுன் தனது உரையில் பறை இசை கலை குறித்து பெருமிதத்துடன் பேசியுள்ளார்

பறை இசை பண்பாட்டு மையத்தை திறந்து வைத்ததில் பெருமையடைகிறேன், வேலு ஆசானுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ராஜ்பவனை லோக் பவனை மாற்றியது எனக்கு பெருமை, ராஜ்பவன் என்பது அடிமை என கருதப்படுவதால் அதை மாற்றியுள்ளேன்.

பிரதமர் மோடி வருவதற்கு முன்பு அதிகாரத்தை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் மோடிஜி வந்த பின்பு பத்ம விருதுகள் மிகவும் ஏழ்மையான மக்கள் மற்றும் கலை, சம்பந்த வட்டர்களுக்கு வழங்கியிருக்கிறார் .

எடுத்துக்காட்டாக ஏழ்மையான மூதாட்டிக்கு வழங்கியிருக்கிறார். அனாதையாக உள்ள பிணத்தை எடுத்து அடக்கம் செய்யும் நபருக்கு பத்மஸ்ரீ கிடைத்துள்ளது. அது போன்று தான் இன்று பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு கிடைத்துள்ளது.

பறை நம்முடைய ஒவ்வொரு அங்கமாகவும், பறை இசை தற்போது திருமண விழா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அதிகப்படியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ்காரர்களுக்கு நாம் அடிமைபட்டு கிடக்கும் போது கலைகளும் அடிமைப்பட்டு, கிடந்தது, பிரிட்டிஷ்காரர்கள் நமது கலையை நமக்கு விட்டு சென்றுள்ளார்கள். பறை பண்பாட்டு கழகத்திற்கு பாரதியார் பெயரை சூட்டியதற்கும், வேலு ஆசானுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் இருக்க கூடாது? பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது? உயர் கல்வி ஆராய்ச்சி மையங்களில் முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்கு ஆய்வுக்குட்படுத்த வேண்டும்

ஐஐடியில் கர்நாடக இசை குறித்து ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. இதேபோல் பறை இசை குறித்தும் அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி நடத்தலாம். 2047ம் ஆண்டு வளர்ச்சியடைந்த பாரதமாக மாறும் திசையில் பயணித்து கொண்டிருக்கிறோம்.

சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளாகும் 2047ம் ஆண்டு பறை இசை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் நாடெங்கிலும் பறை ஓசை கேட்கப்பட வேண்டும். பறை இசைக்கு நாடெங்கிலும் கௌரவம் கிடைக்க வேண்டும். மக்கள் இயக்கமாக கொண்டு சென்றால் நாடெங்கும் பறை இசை பயணிக்கும்.

குக்கிராமத்தில் துவக்கிய பறை இசை நாடெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே எனது ஆசை” என்றார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பத்மஸ்ரீ வேலு ஆசான், தமக்கு வீடு என்ற கனவை ஆளுநர் நிறைவேற்றியுள்ளதாகவும், பறை இசைக்கலையை மென்மேலும் வளர்க்க முயற்சியாக இந்த பண்பாட்டு பயிற்சி மையத்தை துவக்கியுள்ளதாகவும் இதன் மூலம் அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக பயிற்சி வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories