இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் திரா பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள கைபர்- திரா பழங்குடியின பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் வான் வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய பகுதி தாலிபன் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி. ராணுவத்தின் தாக்குதலுக்கு பயங்கரவாதிகளும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேரும் பலியாகினர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். ராணுவத்தின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கைபர் மாகாணப் பகுதியை விட்டு பயங்கரவாதிகள் தப்பி ஓடி எல்லையில் தஞ்சம் அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending