இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் திரா பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள கைபர்- திரா பழங்குடியின பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் வான் வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய பகுதி தாலிபன் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி. ராணுவத்தின் தாக்குதலுக்கு பயங்கரவாதிகளும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேரும் பலியாகினர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். ராணுவத்தின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கைபர் மாகாணப் பகுதியை விட்டு பயங்கரவாதிகள் தப்பி ஓடி எல்லையில் தஞ்சம் அடைந்தனர்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 80 பேர் பலி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

