ஜெர்மனியில் ஸ்பெயின் கைப்பற்றிய யூரோ கால்பந்து கோப்பை!

euro football 2024 spain - 2026

யூரோ கால்பந்துக்கோப்பை 2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஜெர்மனியில் யூரோ கோப்பைப் போட்டி

          டி20 உலகக் கொப்பை கிரிக்கட் போட்டி நடந்துகொண்டிருக்கும்போது யூரோ கால்பந்துக் கோப்பை போட்டி 14 ஜூன் 2024 முதல் 14 ஜூலை 2024 வரை ஜெர்மனியில் நடந்தது. 24 அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் ஜியார்ஜியா அணி முதன் முறையாகக் கலந்துகொண்டது. யூரோ கோப்பை ஜெர்மனியில் நடப்பது இது மூன்றாவது முறையாகும். ஆனால் ஒருங்கிணைந்த ஜெர்மனியில் நடப்பது முதல் முறை. 1988ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் நடந்தது.

          இத்தாலி சென்ற முறை கோப்பை வென்றது நினைவிருக்கலாம். ஆனால் இந்த முறை இத்தாலி காலிறுதிச் சுற்றிற்கு முந்தைய சுற்றில் வெளியேறியது. போட்டியை நடத்துகின்ற ஜெர்மனி, இந்த முறை காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினிடம் தோற்று வெளியேறியது. இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

ஆட்டம் நடந்த முறை

          விளையாடிய 24 அணிகளும் ஆறு குரூப்புகளாகப் பிரிக்கப்பட்டன. குரூப் A பிரிவில் ஜெர்மனி, ஸ்காட்லாந்து, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப் B பிரிவில் ஸ்பெயின், க்ரோஷியா, இத்தாலி, அல்பேனியா ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப் C பிரிவில் ஸ்லோவினியா, டென்மார்க், செர்பியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப் D பிரிவில் போலந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஃப்ரான்சு ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப் E பிரிவில் பெல்ஜியம், ஸ்லோவாகியா, ரோமானியா, உக்ரேன் ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப்  F பிரிவில் துருக்கி, ஜியார்ஜியா, போர்ச்சுகல், செக் குடியரசு ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

முதல் சுற்று – லீக் சுற்று

முதல் சுற்று ஆட்டங்கள் ஜூன் 14 முதல் 26ஆம் தேதி வரை நடந்தன. இதன் முடிவில் குரூப் A பிரிவில் ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. குரூப் B பிரிவில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.  குரூப் C பிரிவில் மூன்று அணிகள் தேர்வாயின. அவை இங்கிலாந்து (5 புள்ளிகள்), டென்மார்க் (3 புள்ளிகள்), ஸ்லோவினியா (3 புள்ளிகள்) அணிகளாகும். குரூப் D பிரிவிலும் மூன்று அணிகள் தேர்வாயின. அவையாவன ஆஸ்திரியா (6 புள்ளிகள்), ஃபிரான்சு (5 புள்ளிகள்), நெதர்லாந்து (4 புள்ளிகள்).

          குரூப் E பிரிவிலும் குரூப் F பிரிவிலும் மூன்று அணிகள் தேர்வாயின.  குரூப் E பிரிவில் ரோமானியா (4 புள்ளிகள்), பெல்ஜியம் (4 புள்ளிகள்), ஸ்லோவாகியா (4 புள்ளிகள்)  குரூப் F பிரிவில் போர்ச்சுகல் (6 புள்ளிகள்), துருக்கி (6 புள்ளிகள்) ஜியார்ஜியா (4 புள்ளிகள்) ஆகிய அணிகள் தேர்வாயின.

euro football 2024 - 2026

நாக்-அவுட் சுற்று ரவுண்ட் ஆஃப் 16

          இந்தச் சுற்று 29 ஜூன் முதல் ஜூலை ஒன்று வரை நடந்தது. இந்தச் சுற்றின் மிகப்பெரிய அப்செட் சுவிட்சர்லாந்து அணியிடம் நடப்பு சாம்பியன் இத்தாலி அணி தோற்றதுதான். காலிறுதிச் சுற்றிற்கு ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுகல், ஃபிரான்சு, நெதர்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து அணிகள் தேர்வாயின.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

காலிறுதிச் சுற்று

காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 5 மற்று 6 தேதிகளில் நடந்தன. முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி ஜெர்மனி  அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி ஃபிரான்சு அணியிடம் பெனால்டி கார்னர் முறையில் 5-3 என்ற கோல்கணக்கில் தோற்றாது. மூன்றாவது ஆட்டத்தில் நெதர்லாந்து அணி துருக்கி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சுவிட்சர்லாந்து  அணியை பெனால்டி கார்னர் முறையில் 5-3  என்ற கோல் கணக்கில் வென்றது.

அரையிறுதி ஆட்டங்கள்

          அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 9 மற்று 10 தேதிகளில் நடந்தன. முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி ஃபிரான்சு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இறுதி ஆட்டம்

          இறுதி ஆட்டம் பெர்லினில் ஜூலை 14ஆம் தேதி அன்று நடந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாத்யில் 47ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் நிகோ வில்லியம்ஸ் முதல் கோல் அடித்தார். இங்கிலாந்தின் கோல் பாமர் 73ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆனால் ஸ்பெயினின் மிகேல் ஒயர்ஸபால் 86ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

          ஸ்பெயின் நான்காவது முறையாக யூரோ கோப்பையைக் கைப்பற்றியுள்ளது, இதற்கு முன்னர் 1964, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது.  கோப்பையை வென்ற அணிக்கு ஏறத்தாழ 2575 மில்லியன் ரூபாய் பரிசாகக் கிடைத்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories