புதுதில்லி: கேரள மாநில ஆளுநராக உள்ள பி.சதாசிவம், தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.சதாசிவம், பின்னர் கேரள மாநில ஆளுநராக தற்போது பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவர் மனித உரிமை கமிஷன் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியானது. தற்போது இதன் தலைவராக இருந்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணன் வரும் மே.12ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அதைத் தொடர்ந்து சதாசிவம், மனித உரிமை கமிஷன் தலைவர் பதவியில் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அவரது நியமனம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
மனித உரிமை கமிஷன் தலைவர் ஆகிறார் பி.சதாசிவம்
Popular Categories


