செவ்வாய்க்கிழமை, இன்று பிரான்ஸ் அதிபர் ப்ராங்கோய் ஹோலண்ட், இது குறித்துக் கூறுகையில், அது மிகவும் உள்ளடங்கிய பகுதி, அதில் சிலர் உயிருடன் இருக்கலாம் என்று கூறியுள்ளார். பார்சிலோனாவில் இருந்து, டுச்செல்டோர்ப் நோக்கிச் சென்றது அந்த விமானம். அது, தெற்கு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாம். ஏர்-பஸ் ரக விமானத்தில் 142 பயணிகள், 2 பைலட்கள் மற்றும் 4 பணியாளர்கள் இருந்தனர். விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது தொடர்பான விரிவான தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. இது அடர்ந்த மலைப் பகுதி என்பதால், மீட்புப் பணியில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த ஏ320 ரக விமானத்தில் 150ல் இருந்து 180 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம். இந்த விபத்து குறித்து தகவல் வந்தது என்றாலும், முழுத் தகவலும் கிடைக்கவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்த தகவல்களை அது தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது….
INFO: We have recently become aware of media reports speculating on an incident though we still do not have any own confirmed information… — Germanwings (@germanwings) March 24, 2015
… As soon as definite information is available, we shall inform the media immediately … — Germanwings (@germanwings) March 24, 2015
“We do not yet know what has happened to flight 4U 9525. My deepest sympathy goes to the families and friends of our passengers and crew 1/2 — Lufthansa (@lufthansa) March 24, 2015
“…on 4U 9525. If our fears are confirmed, this is a dark day for Lufthansa. We hope to find survivors.“ Carsten Spohr 2/2 — Lufthansa (@lufthansa) March 24, 2015