காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படாவிட்டால் காஷ்மீர் அரசில் இருந்து பா.ஜ.க, வெளியேறும் என பா.ஜ.க, தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக., தொண்டர்களிடம் பேசிய அவர், தேசிய நலனில் பா.ஜ.க, ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்று கூறினார். மேலும், இந்நாட்டு மக்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். அவர்கள் எங்களிடம் மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி அங்கு அமைதியைக் கொண்டு வருவதற்காகவே பிடிபி அரசுக்கு ஆதரவு அளித்துள்ளோம். அது நடக்காவிட்டால் அந்த ஆதரவை விலக்கிக் கொள்ள பா.ஜ.க, தயங்காது… இவ்வாறு தொண்டர்களிடம் பேசியபோது, கட்சித் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் அரசில் இருந்து பாஜக வெளியேறும்: அமித் ஷா எச்சரிக்கை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari