காஷ்மீர் அரசில் இருந்து பாஜக வெளியேறும்: அமித் ஷா எச்சரிக்கை

Published:

காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படாவிட்டால் காஷ்மீர் அரசில் இருந்து பா.ஜ.க, வெளியேறும் என பா.ஜ.க, தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக., தொண்டர்களிடம் பேசிய அவர், தேசிய நலனில் பா.ஜ.க, ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்று கூறினார். மேலும், இந்நாட்டு மக்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். அவர்கள் எங்களிடம் மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி அங்கு அமைதியைக் கொண்டு வருவதற்காகவே பிடிபி அரசுக்கு ஆதரவு அளித்துள்ளோம். அது நடக்காவிட்டால் அந்த ஆதரவை விலக்கிக் கொள்ள பா.ஜ.க, தயங்காது… இவ்வாறு தொண்டர்களிடம் பேசியபோது, கட்சித் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img