பாலிவுட்டில் ‘ஆடை’யில் நடிக்க தயக்கம் காட்டும் நடிகைகள்!

amalapal - 2026

ஆடை படத்தின் இந்தி ரீமேக்கில் ஆடை படத்தில் அமலா பால் போன்று துணிச்சலாக நடிக்க நடிகைகள் தயக்கம் காட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த படம் ஆடை. பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே படம் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது. அதனை பூர்த்தி செய்வது போல் படமும் ரிலீசாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் நடிகைகள் செய்ய தயங்கும் விஷயத்தை துணிச்சலாக செய்து அமலா பால் அப்ளாஸ் அள்ளினார். ஆடை படத்தின் முக்கால்வாசி காட்சிகளில் ஆடை இல்லாமல் நடித்து மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் அமலா பாலின் இந்த தைரியமான முயற்சியை பாராட்டினர்.

இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. படத்தின் இந்தி உரிமையை முகேஷ் பட் என்பவர் வாங்கியிருக்கிறார். முகேஷ் பட் இந்தியில் ஆசிக் 2, கேங்ஸ்டர், மர்டர் போன்ற பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஆவார்.

தமிழில் அமலா பால் நடித்த கதாபாத்திரத்தை இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது.

ஆனால் கங்கனா தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியில் நடித்து வருகிறார். எனவே அவர் ஆடை ரீமேக்கில் நடிக்கவில்லை என தயாரிப்பாளர் முகேஷ் பட் அறிவித்துவிட்டார்.

இதனால் இந்தி ஆடை படத்தில் ஆடையில்லாமல் துணிச்சலாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் ஆச்சர்யம் தரும் விதமாக காமினி கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் தயக்கம் காட்டுகிறார்களாம்.

தமிழை விட பாலிவுட் படங்கள் கொஞ்சம் கவர்ச்சி தாராளமாகவே இருக்கும். பாலிவுட் நடிகைகளும் திரைப்படங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி, கவர்ச்சியாக ஆடை அணிவது வழக்கம். இப்போது எல்லாம் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்தி படங்களிலும் படுக்கையறை காட்சிகள் வைக்கப்படுகின்றன. அவற்றிலும் கூட நடிகைகள் துணிச்சலாகவே நடித்து வருகின்றனர்.

அதோடு சமூக வலைதளங்களிலும் தங்ளுடைய பிகினி, அரை நிர்வாணப் புகைப்படங்களை அவர்கள் வெளியிடுவதும் அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வளவு தாராளமாக, பரந்தமனப்பான்மையுடன், துணிச்சலாக செயல்படும் பாலிவுட் நடிகைகள் ஆடை ரீமேக்கில் நடிக்க விரும்பாதது இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories