பாலிவுட்டில் ‘ஆடை’யில் நடிக்க தயக்கம் காட்டும் நடிகைகள்!

amalapal - 2026

ஆடை படத்தின் இந்தி ரீமேக்கில் ஆடை படத்தில் அமலா பால் போன்று துணிச்சலாக நடிக்க நடிகைகள் தயக்கம் காட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த படம் ஆடை. பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே படம் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது. அதனை பூர்த்தி செய்வது போல் படமும் ரிலீசாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் நடிகைகள் செய்ய தயங்கும் விஷயத்தை துணிச்சலாக செய்து அமலா பால் அப்ளாஸ் அள்ளினார். ஆடை படத்தின் முக்கால்வாசி காட்சிகளில் ஆடை இல்லாமல் நடித்து மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் அமலா பாலின் இந்த தைரியமான முயற்சியை பாராட்டினர்.

இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. படத்தின் இந்தி உரிமையை முகேஷ் பட் என்பவர் வாங்கியிருக்கிறார். முகேஷ் பட் இந்தியில் ஆசிக் 2, கேங்ஸ்டர், மர்டர் போன்ற பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஆவார்.

தமிழில் அமலா பால் நடித்த கதாபாத்திரத்தை இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது.

ஆனால் கங்கனா தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியில் நடித்து வருகிறார். எனவே அவர் ஆடை ரீமேக்கில் நடிக்கவில்லை என தயாரிப்பாளர் முகேஷ் பட் அறிவித்துவிட்டார்.

இதனால் இந்தி ஆடை படத்தில் ஆடையில்லாமல் துணிச்சலாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் ஆச்சர்யம் தரும் விதமாக காமினி கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் தயக்கம் காட்டுகிறார்களாம்.

தமிழை விட பாலிவுட் படங்கள் கொஞ்சம் கவர்ச்சி தாராளமாகவே இருக்கும். பாலிவுட் நடிகைகளும் திரைப்படங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி, கவர்ச்சியாக ஆடை அணிவது வழக்கம். இப்போது எல்லாம் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்தி படங்களிலும் படுக்கையறை காட்சிகள் வைக்கப்படுகின்றன. அவற்றிலும் கூட நடிகைகள் துணிச்சலாகவே நடித்து வருகின்றனர்.

அதோடு சமூக வலைதளங்களிலும் தங்ளுடைய பிகினி, அரை நிர்வாணப் புகைப்படங்களை அவர்கள் வெளியிடுவதும் அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வளவு தாராளமாக, பரந்தமனப்பான்மையுடன், துணிச்சலாக செயல்படும் பாலிவுட் நடிகைகள் ஆடை ரீமேக்கில் நடிக்க விரும்பாதது இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories