சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குயான் யிவ் மரணம் அடைந்து விட்டதாக இணைய தளத்தில் பரவிய செய்தி வதந்தி என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெற்று புதிய நாடாக உருவாகக் காரணமாக அமைந்தவர்களில் முக்கியமான ஒருவர் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குயான் யிவ் (91). இவர், கடந்த சில நாட்களாக நுரையீரல் அழற்சி நோயினால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் பிப்ரவரி 5இல் இருந்து சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அண்மையில் அவரது உடல் நிலை மோசமானது. இந்நிலையில் இவர் நேற்று இரவு மரணம் அடைந்து விட்டதாக சிங்கப்பூரில் இயங்கும் ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அதைப் பின்பற்றி பல வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ஆனால், தற்போது சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம், முன்னாள் பிரதமர் லீ மரணம் அடையவில்லை என செய்தி வெளியிட்டு தெளிவு படுத்தியுள்ளது. மேலும் இவ்வாறு வதந்தி பரப்பியவர்கள் யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படியும் போலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குயான் யிவ் குறித்த தகவல் வதந்தி!: சிங்கப்பூர் அரசு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

