வேதஸம்மேளனம் / 2ஆம் ஆண்டு ஸ்ரீ வஸந்த நவராத்திரி மஹாத்ஸவ ஆஹ்வான பத்திரிக்கை
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹரின் அனுக்ரஹத்தையும் ஸ்ரீ ஜகத் குருக்களின் அனுக்ரஹத்துடன் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அனுக்ரஹத்துடனும் பரனூர் மஹாத்மா ஸ்ரீஸ்ரீஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகளின் அனுக்ரஹத்தோடும் மற்றும் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் ஆசியோடும் அனைத்து உலகையும் காப்பாற்றிக் கொண்டிருக்கம் வேதங்களை நாம் காப்பாற்றும் வகையில், பல வேத சாகைகளை பாராயணமாகவும், வேதங்களில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது? என்ற கருத்துக்களையும் ஜனங்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும், தவித்யார்த்திகளுக்கு ஊக்கத்தை கொடுப்பதற்காகவும், வேதவித்வான்களை கெளரவிப்பதற்காகவும் மேற்படி டிரஸ்டு மூலமாக வேதஸம்மேளனம் 7 நாட்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தை மகத்தான பாக்யமாக கருதி ஆஸ்திகர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு தங்களால் இயன்றவரை தாராளமான முறையில் பணம், பொருள் மற்றும் சரீர கைங்கர்யங்களை செய்து, வேத பாஷ்ய உபன்யாஸங்களை கேட்டு, வேதபாராயணங்களை காது குளிரகேட்டு, ஸகல ஹோமங்களிலும் கலந்துகொண்டு ஸ்ரீ வேதமாதாவின் அனுக்ரஹத்தையும் பெற்று எல்லாவித நன்மைகளை அடையவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். நாள்: 25-03-2015 முதல் 31-03-2015 வரை 7 நாட்கள் நடைபெறும் இடம்: G.K. ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா, அம்பத்தூர், சென்னை- 600 053. ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ அனுக்ரஹா டிரஸ்டு (பதிவு) எண்20, ஹாஸ்பிட்டல் ரோடு ஸத்யபுரம், அம்பத்தூர், சென்னை-600 053 செல்:9444207063


