உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற கடைசி அரையிறுதிப் போட்டியில், இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில், ஆஸ்திரேலியா இந்தியாவை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கண்டது. இந்த வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் அலசப்பட்டாலும், இந்தியாவின் முன்னாள் மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டது …. ‘‘இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பாக விளாயாடியது. இருப்பினும் இன்றைய போட்டி, மிகவும் கடினமானது. இந்தத் தோல்வியை சகித்துக் கொள்வதும் கஷ்டமானதுதான். ஆனாலும் நீங்கள் மிகச் சிறப்பாக விளையாடினீர்கள். உங்கள் போட்டியை ரசிகர்கள் மகிழ்ச்சியுடனேயே பார்த்து ரசித்தார்கள். இந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டீவ் ஸ்மித்தின் சதம், பின்ஞ் கொடுத்த பார்ட்டனர்ஷிப், ஜான்சனின் பினிஷிங் பந்துவீச்சு ஆகியவை இணைந்து இந்தியாவிடமிருந்து வெற்றியைப் பறித்துவிட்டன” என்று சச்சின் கூறியுள்ளார்.
Well played in the ICC World Cup Team India. A tough game today and a loss is always difficult to handle. (1/3) — sachin tendulkar (@sachin_rt) March 26, 2015
But you have played some terrific cricket throughout and all the fans have enjoyed watching you. Congratulations to Australia (2/3) — sachin tendulkar (@sachin_rt) March 26, 2015
for a convincing win. Steve Smith’s hundred, Finch’s support to him and a strong finish by Johnson made the difference. #CWC15 (3/3) — sachin tendulkar (@sachin_rt) March 26, 2015


