பரிதாபம்… தாயும் மகளும் தூக்கிலிட்டு தற்கொலை!

Published:

girl-and-mother-hanged
girl-and-mother-hanged

கடப்பா மாவட்டம் சங்கராபுரத்தில் வசித்து வந்த தாயும் மகளும் தூக்கிலிட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டனர்.

கடப்பாவை சேர்ந்த ஸ்ராவணிக்கும் (29) சிவகுமார் ரெட்டிக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 வயதில் மகள் தன்விகா உள்ளார். சிவகுமார் ரெட்டி தற்போது அமெரிக்காவில் சாப்ட்வேர் பணியில் உள்ளார்.

ஸ்ராவணி மகள் தன்விகாவோடு சேர்ந்து சங்கராபுரத்தில் வசித்து வந்தார். ஆனால் சென்ற ஐந்து ஆண்டுகளாக கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டன. வியாழக்கிழமை காலை ஸ்ராவணி தன் மகளோடு சேர்ந்து படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிலிட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

விவரம் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சின்னசௌக் போலீசார் அங்கே சோதனை செய்தார்கள். இறந்த உடல்களை உடற்கூறாய்வுக்காக ரிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொண்டு விசாரித்து வருவதாக சிஐ அசோக் ரெட்டி கூறினார். தற்கொலைக்கான காரணங்களை விசாரித்து வருவதாகவும் கூறினார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img