January 19, 2025, 10:18 AM
25.7 C
Chennai

இன்னும் 3 நாட்கள்தான்?! அரசு நலத்திட்டங்கள் பெற ஆதார் இணைப்புக்கான காலக் கெடு!

அரசு நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக் கெடுவை நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. எனவே இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளன. ஆதார் எண்ணை அரசு நலத் திட்டங்களுக்கு இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. முன்னதாக, பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கெடுவை ஜூன் மாதம் வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்தது.

வங்கிக் கணக்கு, செல்போன் சேவை ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு வரும் 31ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவால், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை ஜூன் 30ஆம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது. இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆதார் பாதுகாப்பு உத்தரவாதத் தன்மை குறித்த பவர் பாயின்ட் விளக்கத்தின் எஞ்சிய பகுதியை, தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷன் பாண்டே விவரித்தார்.

ALSO READ:  குறைந்த விலை, அதிக கையூட்டு; கரும்பு விவசாயிகள் துயர் துடைக்க வேண்டும்: அன்புமணி இராமதாஸ்!

இருப்பினும், ஆதார் இணைக்கப்படாததால் சுமார் 14 கோடி பேர் அரசு நலத் திட்டங்களின் பலனை பெறமுடியாமல் இருப்பதால், மார்ச் 31 வரையிலான கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோரினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் வேணுகோபால், ஆதாரை காரணம் காட்டி ஒருவருக்குக் கூட இதுவரை அரசு சலுகை மறுக்கப்படவில்லை எனக் கூறினார்.

இதை அடுத்து, அரசு திட்டங்களுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.