இன்னும் 3 நாட்கள்தான்?! அரசு நலத்திட்டங்கள் பெற ஆதார் இணைப்புக்கான காலக் கெடு!

aadhar - 2026

அரசு நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக் கெடுவை நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. எனவே இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளன. ஆதார் எண்ணை அரசு நலத் திட்டங்களுக்கு இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. முன்னதாக, பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கெடுவை ஜூன் மாதம் வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்தது.

வங்கிக் கணக்கு, செல்போன் சேவை ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு வரும் 31ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவால், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை ஜூன் 30ஆம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது. இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆதார் பாதுகாப்பு உத்தரவாதத் தன்மை குறித்த பவர் பாயின்ட் விளக்கத்தின் எஞ்சிய பகுதியை, தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷன் பாண்டே விவரித்தார்.

இருப்பினும், ஆதார் இணைக்கப்படாததால் சுமார் 14 கோடி பேர் அரசு நலத் திட்டங்களின் பலனை பெறமுடியாமல் இருப்பதால், மார்ச் 31 வரையிலான கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோரினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் வேணுகோபால், ஆதாரை காரணம் காட்டி ஒருவருக்குக் கூட இதுவரை அரசு சலுகை மறுக்கப்படவில்லை எனக் கூறினார்.

இதை அடுத்து, அரசு திட்டங்களுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories