December 5, 2025, 11:08 PM
26.6 C
Chennai

இன்னும் 3 நாட்கள்தான்?! அரசு நலத்திட்டங்கள் பெற ஆதார் இணைப்புக்கான காலக் கெடு!

aadhar - 2025

அரசு நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக் கெடுவை நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. எனவே இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளன. ஆதார் எண்ணை அரசு நலத் திட்டங்களுக்கு இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. முன்னதாக, பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கெடுவை ஜூன் மாதம் வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்தது.

வங்கிக் கணக்கு, செல்போன் சேவை ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு வரும் 31ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவால், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை ஜூன் 30ஆம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது. இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆதார் பாதுகாப்பு உத்தரவாதத் தன்மை குறித்த பவர் பாயின்ட் விளக்கத்தின் எஞ்சிய பகுதியை, தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷன் பாண்டே விவரித்தார்.

இருப்பினும், ஆதார் இணைக்கப்படாததால் சுமார் 14 கோடி பேர் அரசு நலத் திட்டங்களின் பலனை பெறமுடியாமல் இருப்பதால், மார்ச் 31 வரையிலான கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோரினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் வேணுகோபால், ஆதாரை காரணம் காட்டி ஒருவருக்குக் கூட இதுவரை அரசு சலுகை மறுக்கப்படவில்லை எனக் கூறினார்.

இதை அடுத்து, அரசு திட்டங்களுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories