மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

Published:

1001382569 - 2026

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா துவங்கி நடைபெற்று வரும் நிலையில் விழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மிதுன லக்னத்தில்கோலாகலமாக நடைபெற்றது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நேரிலும், டிவிகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் நேரடியாக கண்டு தரிசனம் செய்து, மீனாட்சி அம்மனின் அருளை பெற்றனர். திருமணக் கோலத்தில் காட்சி தந்த மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர், பிரியாவிடை அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.பக்தர்கள் அனைவரும் திருமண விருந்து வழங்கப்பட்டது.


​மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று (ஏப்ரல் 28) கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாள்தோறும் காலை மற்றும் மாலையில் மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். நாள்தோறும் சிவ பெருமானின் ஒவ்வொரு திருவிளையாடல்களும் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
1001382564 - 2026

சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக ஏப்ரல் 26ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழாவும், ஏப்ரல் 27 ம் தேதி திக்விஜய வைபவமும் நடைபெற்றது. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 28ம் தேதியான் இன்று காலை 08.35 மணிக்கு மேல் 08.59 மணிக்குள் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுந்தரேஸ்வரர், பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி, பவளகனிவாய் பெருமாள் ஆகியோர் மீனாட்சி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.


சரியாக காலை 08.40 மணிக்கு மேல் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட போது, திருக்கல்யாணத்தை காண வந்திருந்த ஏராளமான பெண்கள் தாங்களும் தாலி சரடுகளை மாற்றிக் கொண்டனர். மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபவத்தை கண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. அதே போல் மீனாட்சி அம்மனுக்கு மாங்கல்ய தாரணம் நடைபெறும் சமயத்தில் தாங்களும் தாலி சரடுகளை மாற்றிக் கொண்டால், தன்னை போல் மற்ற பெண்களுக்கும் அன்னை மீனாட்சி தீர்க்க சுமங்கலி வரத்தை அருள்வாள் என்பது நம்பிக்கை.

நாளை திருத்தேரோட்டம் –
பக்தர்களின் பக்தி பரவசத்திற்கு இடையே திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து திருமணக்கோலத்தில் சுவாமியும், அம்பாளும் கோவிலை வலம் வந்தனர். மாலையில் பூப்பல்லக்கு வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வருவார்கள். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 29ம் தேதியன்று காலையில் மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் நடைபெறும். மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் திருமண விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு பல லட்சம் பக்தர்களுக்கு தடபுடலாக திருமண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண ஏராளமானோர் மாசி வீதிகளில் கூடி இருந்தனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!


ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து, டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே திருக்கல்யாணத்தை காண முடியும் என்பதால் மற்ற பக்தர்களும் திருக்கல்யாணத்தை நேரடியாக காண்பதற்காக மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி பல இடங்களிலும் எல்இடி திரைகள் வைக்கப்பட்டு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. திரையில் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தை தரிசித்த படி, வீதிகளில் அமர்ந்தும் பல பெண்கள் தாலி சரடினை மாற்றிக் கொண்டனர்.இந்தநிலையில் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து ரூ500 டிக்கெட் பெற்றவர்கள் பலர் திருமண மண்டபத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டாமல் பெரும் அவதிப்பட்டு ஏமாற்றம் அடைந்தனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img