மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

1001382569 - 2026

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா துவங்கி நடைபெற்று வரும் நிலையில் விழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மிதுன லக்னத்தில்கோலாகலமாக நடைபெற்றது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நேரிலும், டிவிகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் நேரடியாக கண்டு தரிசனம் செய்து, மீனாட்சி அம்மனின் அருளை பெற்றனர். திருமணக் கோலத்தில் காட்சி தந்த மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர், பிரியாவிடை அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.பக்தர்கள் அனைவரும் திருமண விருந்து வழங்கப்பட்டது.


​மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று (ஏப்ரல் 28) கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாள்தோறும் காலை மற்றும் மாலையில் மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். நாள்தோறும் சிவ பெருமானின் ஒவ்வொரு திருவிளையாடல்களும் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!
1001382564 - 2026

சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக ஏப்ரல் 26ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழாவும், ஏப்ரல் 27 ம் தேதி திக்விஜய வைபவமும் நடைபெற்றது. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 28ம் தேதியான் இன்று காலை 08.35 மணிக்கு மேல் 08.59 மணிக்குள் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுந்தரேஸ்வரர், பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி, பவளகனிவாய் பெருமாள் ஆகியோர் மீனாட்சி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.


சரியாக காலை 08.40 மணிக்கு மேல் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட போது, திருக்கல்யாணத்தை காண வந்திருந்த ஏராளமான பெண்கள் தாங்களும் தாலி சரடுகளை மாற்றிக் கொண்டனர். மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபவத்தை கண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. அதே போல் மீனாட்சி அம்மனுக்கு மாங்கல்ய தாரணம் நடைபெறும் சமயத்தில் தாங்களும் தாலி சரடுகளை மாற்றிக் கொண்டால், தன்னை போல் மற்ற பெண்களுக்கும் அன்னை மீனாட்சி தீர்க்க சுமங்கலி வரத்தை அருள்வாள் என்பது நம்பிக்கை.

நாளை திருத்தேரோட்டம் –
பக்தர்களின் பக்தி பரவசத்திற்கு இடையே திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து திருமணக்கோலத்தில் சுவாமியும், அம்பாளும் கோவிலை வலம் வந்தனர். மாலையில் பூப்பல்லக்கு வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வருவார்கள். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 29ம் தேதியன்று காலையில் மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் நடைபெறும். மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் திருமண விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு பல லட்சம் பக்தர்களுக்கு தடபுடலாக திருமண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண ஏராளமானோர் மாசி வீதிகளில் கூடி இருந்தனர்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..


ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து, டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே திருக்கல்யாணத்தை காண முடியும் என்பதால் மற்ற பக்தர்களும் திருக்கல்யாணத்தை நேரடியாக காண்பதற்காக மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி பல இடங்களிலும் எல்இடி திரைகள் வைக்கப்பட்டு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. திரையில் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தை தரிசித்த படி, வீதிகளில் அமர்ந்தும் பல பெண்கள் தாலி சரடினை மாற்றிக் கொண்டனர்.இந்தநிலையில் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து ரூ500 டிக்கெட் பெற்றவர்கள் பலர் திருமண மண்டபத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டாமல் பெரும் அவதிப்பட்டு ஏமாற்றம் அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories