சிறுமியைக் கர்ப்பமாக்கிய இளைஞன்! போக்சோவில் கைது!

Published:

dharma - 2026

விழுப்புரம் அருகே சிறுமியை கர்ப்பமாகிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் டி. எடையார் என்னும் கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி வாந்தி மயக்கம் என அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பதறிப்போன அவரது தாயார், சிறுமியை திருவெண்னைய் நல்லூர் கிராமத்திலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச்சென்றார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற சிறுமியின் தாயார் இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிறுமியின் தாயார் கொடுத்த புகாரை அடுத்து, போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், சிறுமி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த தர்மா என்ற இளைஞர் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாதபோது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி வந்தது தெரியவந்தது.

இதனால் மாணவி கர்ப்பமடைந்த நிலையியல், தற்போது சம்மந்தப்பட்ட இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img