30-03-2023 2:30 PM
More

    To Read in other Indian Languages…

    யார் அந்த அமானவன்?

    ‘அமானவன்’…இப்படி ஒரு பெயர் கேள்விப்பட்டதில்லையே…! இது கடவுளின் பெயரா… இல்லை ஏதாவது புராணப் பாத்திரமா…!

    இவனை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதுவும் இறப்புக்கு பின்னரே பார்க்க முடியும். இவனது இருப்பிடம் வைகுண்டம்.

    அங்கு பெருமாளின் இருப்பிடத்திற்கு முன்னால் துவார பாலகர்கள் இருப்பார்கள். பெருமாள் கோயிலில் ஜெயன், விஜயன் என்ற பெயரில் சிலை வடிவாக பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு சற்று முன்னால் அமானவன் நின்றிருப்பான்.

    சரி…இவனுக்கு அங்கு என்ன வேலை!

    நீங்கள் தினமும் காலையில் எழும்போதே சுவாமி படத்தின் முன் விழித்திருக்கலாம்.
    ‘ஹரி.. ஹரி…, நாராயணா… கோவிந்தா…பத்மநாபா’ என்றெல்லாம் பெருமாளின் பெயர்களைச் சொல்லியபடியே எழலாம். எந்நேரமும் பிறரது நலம் பற்றி சிந்தித்திருக்கலாம். என்ன கஷ்டம் வந்தாலும், “பெருமாளே! எனக்கு எல்லாம் நீயே.. இந்தக் கஷ்டத்தையும் நீ தந்த பரிசாக ஏற்கிறேன்” என்று ‘பாசிட்டிவ்’ ஆக நினைக்கலாம். புரட்டாசி சனி விரதம் இருந்திருக்கலாம்.

    இப்படிப்பட்ட நல்லவர்கள் இறந்த பிறகு, வைகுண்ட வாசலுக்கு செல்வார்கள். அங்கே அமானவன் காத்திருப்பான். அவர்களைக் கண்டதும், கையைப் பிடித்து அழைத்துச் செல்வான். இவனுடன் வருவோரை துவார பாலகர்கள் தடுக்க மாட்டார்கள். பெருமாள் முன் நிறுத்தி மகாலட்சுமி தாயாரோடு பெருமாளைத் தரிசிக்க செய்வான்.

    இவனுக்கு ஏன் அமானவன் என பெயர் வந்தது?

    ‘மானவன்’ என்றால் ‘மனிதன்’. ‘அமானவன்’ என்றால் மனிதன் அல்லாதவன். அதாவது தேவபுருஷன். புண்ணியம் செய்தவர்களை பெருமாளிடம் அழைத்துச் செல்வது இவனது புண்ணிய பணி.

    ‘அமானவன் கரத்தாலே தீண்டல் கடன்’ என்கிறார் வைணவ ஆச்சாரியார் மணவாள மாமுனிகள். அதாவது, ‘அமானவன் என்னை கைப்பிடித்து பெருமாளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’ என்கிறார்.

    நம் கைகளையும் அமானவன் பிடிக்க இன்றே நல்லதை செய்யத் தொடங்குவோம்.

    மன்னுயிர்கா ளிங்கே மணவாள மாமுனிவன்
    பொன்னடியாஞ் செங்கமலப் போதுகளை- உன்னிச்
    சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை
    கரத்தாலே தீண்டல் கடன்.

    – உபதேச ரத்னமாலையின் கடைசி பாட்டு… அமானவனும் நம்மை கரத்தாலே தீண்டல் கடன்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    1 COMMENT

    1. Manam Paravasam Adaindhadhu . Srimman Narayanan Thiruarulinaal Enakum Andha Punyam Kidaikkavendum Enru Manam Engi Avaridam Aatmarthamana Prarthanayyaagalai Samarpikkiren . Srimadh Emperuman Thiruadigale Sharanam .
      Srimadh Manavaala Maamunigal Thiruadigale Sharanam .

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    2 × 1 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,034FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...