தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன விளக்கம்..!

jayakumar - 2026

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெறும்  போராட்டத்தின் போதான வன்முறை சம்பவத்தில், தவிர்க்க முடியாத சூழலில்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100வது நாளைக் கடந்து, இன்று வன்முறையாக மாறியது. வன்முறையாளர்கள் வாகனங்களை தீவைத்துக் கொளுத்தியதுடன், ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் பணியாளர்களின் வீடுகளையும் கொளுத்தினர். இதனால் வேறு வழியின்றி  போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்லையில் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர், எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு கோப்புகளை கொளுத்தி எல்லை மீறிப் போனதால் துப்பாக்கிச்சூடு சம்பவம் தவிர்க்க முடியாததாகி விட்டது என்று விளக்கம் அளித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்பதுதான் அரசின் நிலைப்பாடு. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்பதை அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தி இருக்கிறோம் என்று குறிப்பிட்டார் ஜெயக்குமார்.

மேலும், இந்த துரதிருஷ்டவசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விவாதம் நடைபெற்றது, இது குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என அவர் கூறினார்.

1 COMMENT

  1. சொட்ட சொட்ட தலையன் ரொம்ப மூளைக்காரன் மாதிரி பேசுவாரு.. ஆனா உண்மையில் எல்லாம் களிமண் !!
    இவனை எல்லாம் நிக்க வச்சு சுடனும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories