February 15, 2025, 5:49 AM
24.3 C
Chennai

எந்த ஆட்சி வந்தாலும்… கோயில்ல ஊழல் இருக்கத்தான் செய்யும்!

மதுரை: எந்த ஆட்சி வந்தாலும் கோயில்களில் ஊழல் இருக்கத்தான் செய்யும் என்றும், நித்தியானந்தா மதுரை ஆதினத்துக்குள் எக்காரணம் கொண்டும் நுழைய முடியாது என்றும் கூறினார் மதுரை ஆதினம்.

செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதினம் அருணகிரிநாதர், நித்தியானந்தா மதுரை ஆதினத்திற்குள் நுழைய முடியாது. ஒரு முறை ஆதினத்திலிருந்து நீக்கப் பட்டவரை மீண்டும் சேர்த்துக் கொள்ள முடியாது. நித்தியானந்தா மீது வழக்கு இருப்பதால் சாதாரண மனிதராகவும் அவர் உள்ளே நுழைய முடியாது என்றார் மதுரை ஆதினம்.

மேலும்,  எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோயில்களில் ஊழல் இருக்கத்தான் செய்யும் என்றார்  மதுரை ஆதினம் அருணகிரிநாதர்.

மதுரை ஆதினம் கூறுவது போல், எந்த நபர் மதுரை ஆதினத்தில் அதினகர்த்தராக வந்தாலும், அங்கே நிச்சயம் முறைகேடும் ஊழலும் தான் இருக்கும். அப்படி இருக்க, நித்தியானந்தா மட்டும் ஏன் விதிவிலக்கு என்று கேட்கின்றனர் நித்யானந்தா ஆதரவாளர்கள். ஏற்கெனவே, கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டுதான் நித்தியானந்தவை ஆதினத்தில் சேர்த்து இளைய ஆதினமாக பட்டாபிஷேகம் எல்லாம் செய்தார் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் என்ற குற்றச்சாடு இவர் மீது வைக்கப் பட்டது. ஒரு முறை ஆதினத்தில் இருந்து விலக்கப்பட்டவர் மீண்டும் சேர்த்துக் கொள்ள முடியாது என்றால், ஏற்கெனவே ஒருமுறை இளையவராக பட்டாபிஷேகம் செய்யப்பட்டவரை மீண்டும் பட்டாபிஷேகம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று வாதிடுகின்றனர் நித்யானந்தா ஆதரவாளர்கள்.

எப்படியோ, மீனாட்சி ஆட்சி புரியும் மதுரைக்கும், சம்பந்தப் பெருமான் ஆட்சி செய்த மதுரை ஆதினத்துக்கும் அவப்பெயர்களை இப்போது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை!

திராவிட இயக்கங்களின் ஆட்சியில்தான், பணத்தைப் பெற்றுக் கொண்டு, நாத்திகர்களைக் கோயில் அலுவலர்களாக, அதிகாரிகளாக நியமித்தார்கள், அதுபோல், மதுரை ஆதினத்துக்கும் ஏதோ வழியில் வந்து சேர்ந்துவிட்டார் தற்போதைய ஆதினகர்த்தர். ஆலயங்களில் இருந்து நாத்திக திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்களை விரட்டி, ஆலயங்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று போராட்டம் நடந்து வருவதைப் போல், மதுரை ஆதினத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் முன்வைக்கப்பட்டால், ஆச்சரியப் படுவதற்கில்லை என்கிறார்கள் இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விவாதிப்பவர்கள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

சென்னைக்கு முதல் ஏசி புறநகர் ரயில்! டிக்கெட் விலை ‘அம்மாடியோவ்’!

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு ஐசிஎஃப்-பில் முதல் ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி நிறைவு

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

Entertainment News

Popular Categories