January 18, 2025, 5:28 AM
24.9 C
Chennai

நெல் கொள்முதல் நிலையங்கள் திடீர் மூடல்: விவசாயிகள் அதிர்ச்சி

நாகை : தமிழகத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் திடீரென்று மூடப் பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி டெல்டா பகுதிகளான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீரைக் கொண்டு முற்பட்ட குறுவை சாகுபடி செய்து வந்தனர். அவர்கள் சாகுபடி செய்த நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப் பட்டு வந்தது.

குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1660 என்ற விலைக்கு வாங்கி வந்தது. திருச்சி, தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாகவும் நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவும் கொள்முதல் செய்து வந்தது.

மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.200ஐ உயர்த்தி அறிவித்தது. செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து குவிண்டால்ரூ.1860 என்று விலைக்கு வாங்கிக் கொள்ளும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், திடீரென்று நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களையும் மூடப்பட்டு விட்டது.

ALSO READ:  கோயிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம்; அரசு தலையிட கோரிக்கை!

இது தொடர்பாக துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு மத்திய அரசு கொள்முதலை நிறுத்தச் சொன்னதால் தமிழக அரசு நெல் கொள்முதலை நிறுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர்.

ஏற்கெனவே நாள் ஒன்றுக்கு குறைந்த அளவே நெல் கொள்முதல் செய்து வந்ததால் தனியார் நெல் வியாபாரிகள் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு அதாவது குவிண்டால் ஒன்று ரூ.1300 என்று வாங்கிச் செல்கின்றனர்.

தமிழக அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் மேலும் நெல் விலையை குறைத்துக் கொடுக்க வேண்டியிருக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை