Breaking News
விஜய் சேதுபதிய காறித் துப்புறாய்ங்க… எல்லாம் இந்த போஸ்டருக்காகத்தான்!
சென்னை அண்ணா சாலையில் ஒட்டப்பட்டுள்ள “.... போட ஒரு பொண்ணு வேணும்” என்ற சினிமா விளம்பரத்தைக் கண்டு, பலரும் காறித் துப்புகிறார்கள் விஜய் சேதுபதியை.பிப்.14 இன்று முற்பகல் 11 மணிக்கு கடல போட ஒரு பொண்ணு வேணும் என்ற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி ரிலீஸ் செய்கிறார்! அதற்கான ப்ரமோஷனுக்கான போஸ்டர்கள் நகரெங்கும் ஒட்டப் பட்டிருப்பதைக் கண்டு சாலையைக் கடந்து போகிறவர்கள் இதைப் பார்த்துக் காறித் துப்பியபடி கடந்து செல்கிறார்கள்.போஸ்டரில் இருந்த வாசகம் தான் இந்த அறுவெறுப்பை தந்துள்ளது.கடலை என்கிற வார்த்தையை எடுத்து விட்டு… மிச்சத்தை மட்டும் போட்டு அந்த போஸ்டர் அடிக்கப் பட்டு பொதுவில் ஒட்டப் பட்டுள்ளதைப் பார்த்து, சினிமா உலகம் எங்கே போகிறது என்று பலரும் கொதிப்படைந்தனர். பட விளம்பரத்துக்காக என்ன வேண்டுமானாலும் இப்படி எழுதி வைப்பார்களா என்று கோபம் அடைந்த சிலர், இதனைக் கிழித்து எறிந்தனர்.இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை விஜய் சேதுபதி வெளியிடுவது அவமானம், வெட்ககரமானது என்று கூறினர்.இது சமூக வலைத்தளங்களிலும் ஒரு சுற்று வந்தது. ஒருவர் இதைக் குறித்துப் பகிர்ந்து கொள்ள, தொடர்ந்து, இந்த போஸ்டரை நான் கிழித்தெறிந்தேன். இந்தப் போஸ்டரைக் கண்டு முகம் சுளித்து திட்டித் தீர்த்த ஒரு தாய்க்காக நான் ஒரு மகனாக சுமார் 300 போஸ்டர் வரை கிழித்தெறிந்தேன் என்று கருத்துப் பதிவு செய்திருந்தார்.சிலர் (அன்)போட ஒரு பொண்ணு வேணும்; (பண்)போட ஒரு பொண்ணு வேணும்... என்றெல்லாம் கோடிட்ட இடத்தை நிரப்பத் தொடங்கினர். சிலர், போலீஸில் புகார் அளிக்க வேண்டும் என்று கொதிப்படைந்தனர்.எங்க எண்ணம் தெளிவாக இருக்கு, உங்க நினைப்பு தான் ஆபாசமா யோக்குதுனு எளிதா எஸ்கேப் ஆகிடுவாங்க. பெண்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற ஆதிக்க சிந்தனையின் வெளிப்பாடு தான் இந்த போஸ்டர்... என்று கொதித்துப் போய் கருத்து சொல்லியிருக்கிறார் ஒரு பெண்.
ரூ.100 போதும்.. ஒரு நாள் முழுக்க ‘டெய்லி பாஸில்’ மெட்ரோ ரயிலில் ஊர் சுத்தலாம்!
சென்னை: சென்னை மெட்ரோவில் இப்போது நாள் பாஸ் என ரூ.100க்கு ஒரு நாள் முழுதும் செல்லுபடியாகும் டிக்கெட் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது
ஏரிகளில் நீர் இல்லை; நிலத்தடி நீர் குறைவு; தமிழகம் முழுதும் குடிநீர் பற்றாக்குறை… அரசு நடவடிக்கை என்ன?: ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது, ஏரிகளில் தண்ணீர் இல்லை - 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்து விட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது; குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?...
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து!
சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்துள்ளது தமிழக அரசு! இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப் பட்டுள்ளது.அண்மையில் பொங்கல் தினத்தை அடுத்து தொடர்ச்சியாக ஜாக்டோ ஜியோ...
திமுக., தனித்து நின்றால், அதிமுக.,வும் தனித்து நிற்கத் தயார்:ஓபிஎஸ்.,!
சென்னை: திமுக., தேர்தலில் தனித்து நின்றால், அதிமுக.,வும் தனித்துப் போட்டியிடும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ்., கூறினார்.முன்னதாக, பாஜக., அரசின் பிடிக்குள் அதிமுக., சிக்கிக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி குற்றம் சாட்டினார்....
அமமுக., திமுக.,ல்லாம் வேஸ்ட்! நாட்டுக்குத் தேவையில்லாத கட்சிகள்! : ஜெயக்குமார் !
சென்னை: திமுக., அமமுக., இவை எல்லாம் நாட்டுக்குத் தேவையில்லாத கட்சிகள் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.தமிழகத்தில்...
மோடியின் மதுரை வருகையால் திருப்புமுனை: சொல்கிறார் தமிழிசை!
மதுரை: மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர், பிரதமர் மோடி, மதுரை வருகைக்கு பின்னர் தமிழகத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க, செல்வாக்கு...
ரூ.2000 சிறப்பு நிதி வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து வழக்கு!
2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என்ற திட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.வறுமைக் கோட்டுக்குக் கீழ்...
மெட்ரோவில் இலவச பயணம்! நேற்று ஒரே நாளில் உச்சபட்ச அளவு!
சென்னை வண்ணாரப்பேட்டை- டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை கடந்த 10 ஆம் தேதி பிரதமர் மோடி காணொளிக் காட்சி முறையில் தொடங்கி வைத்தார்.இதை அடுத்து பயணிகளின் வரவேற்பைப் பெறுவதற்காக,...
மார்ச் முதல் கொல்லம் – சென்னை தினசரி எக்ஸ்ப்ரஸ் ரயில்!
வரும் மார்ச் முதல் தினசரி இயக்கப்படும் கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறித்து ரயில்வே உறுதி செய்துள்ளது.ரயில் எண் 16101 / 16102 தினமும் கொல்லத்தில் இருந்து சென்னை, சென்னையில்...
இன்றும் இலவசம்! மெட்ரோ ரயிலில் மகிழ்ச்சி பயணம்..!
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம். இந்த வாய்ப்பு பயணிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.சென்னை வண்ணாரப்பேட்டை- டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை கடந்த 10 ஆம்...
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்க்கு ரூ.2 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப் படும்!
சென்னை: வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் வழங்க திட்டமிடப்பட்டுள்ள ரூ.2 ஆயிரம் உதவித்தொகை இந்த மாத இறுதிக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி...