December 6, 2025, 1:22 AM
26 C
Chennai

பயங்கரவாதத்தை வேருடன் அழிக்க வேண்டிய தருணம்: ராம.கோபாலன்!

kashmir5 - 2025
பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டிய தருணம் இது என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப். 42 வீரர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர்தியாகம் செய்திருப்பதற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது!

காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது எனும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு வெடி மருந்து நிரப்பிய வாகனத்தின் மூலம், அந்த வழியாக சென்ற சி.ஆர்.பி.எஃப். வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் 42 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். .

இந்த தாக்குதலுக்குக் காரணமான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பையும், அதில் ஈடுபட்டவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டிய தருணம் இது. கடுமையான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நமது இராணுவத்தின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இது, பாரத தேசத்திற்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. பயங்கரவாதம் என்றும் நன்மை செய்யாது. மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் உதவியில்லாமல் இத்தகைதொரு சதி செயலை ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் செய்திருக்க முடியாது. எனவே, உலக நாடுகள், பயங்கரவாதத்திற்கு ஆதரவான பாகிஸ்தானை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு பதிலடி கொடுக்க, இந்திய இராணுவம் முன் வரவேண்டும். இனி இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் எண்ணம் கூட பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏற்படாதவண்ணம், இந்திய இராணுவத்தின் நடவடிக்கை அமைய வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும், அதற்கு ஆதரவு தருவோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இந்து முன்னணி, தமிழக முழுவதும் கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பலியான சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் ஆன்மா நற்கதியடை பிரார்த்தினை செய்ய இருக்கிறது. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அதேசமயம் கொடூர தாக்குதல் நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒடுக்கும் இந்திய அரசு, இராணுவ நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் தார்மீக ஆதரவை பகிரங்கமாக தெரிவிக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

-என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories