கூட்டணிப் பேச்சுவார்த்தையின் தொடக்கமே! பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்!

pon radhakrishnan thamizisai - 2026

சென்னைக்கு நேற்று வந்திருந்த மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுடன் தமிழக அமைச்சர்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன்,   பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. இது கூட்டணி பேச்சுவார்த்தையின் தொடக்கமே. பேச்சுவார்த்தை தொடரும். ஹோட்டல்களில் சந்திப்பதற்கு பதிலாக இல்லத்தில் சந்தித்தோம். எது நல்லதென்று நீங்களே சொல்லுங்கள் என்று கூறினார்.

இதன் பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், வெகு விரைவில் நல்ல செய்தி வரும் திமுக, காங் அல்லாத பல கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. அதிக இடங்களில் வெல்வதே இலக்கு என்று கூறினார்.

முன்னதாக நேற்று, நள்ளிரவைக் கடந்தும் பாஜக., அதிமுக., கூட்டணிப் பேச்சுவார்த்தை  நடந்தது. இதில், இரு தரப்பும் தங்களது நிலைப்பாடை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு, முதல் கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கி வைத்துள்ளனர்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப் பட வுள்ள நிலையில், எல்லா கட்சிகளும் ஒரு புறம் தீவிரமான பிரச்சாரத்திலும் மற்றொரு புறம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையிலும் இறங்கியுள்ளன.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையை தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் வீட்டில் நேற்று இரவு சென்னை வந்த பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். இதில் அதிமுக தேர்தல் பணிக் குழுவில் இடம்பெற்றுள்ள, மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகர் ஆகியோரும் கலந்து கொண்டர்.

பேச்சுவார்த்தையின் போது பாஜக.,வுக்கு 8 இடங்கள்தான் ஒதுக்க இயலும் என அதிமுக தரப்பில் பேசப்பட்டது. ஆனால் இது எங்களுக்குப் போதாது என்றும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு சில எம்பி தொகுதிகள் தேவை என்றும் பாஜக கோரிக்கை வைத்தது. எனவே குறைந்தது 12 தொகுதிகளாவது வேண்டும் என்று பாஜக கோரியது.

இதற்கு அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப் பட்டது. எனவே பேச்சுவார்த்தை மேலும் நீடித்தது. விடிய விடிய நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையே முடிவு செய்யப் படாததால், மீண்டும் கூடிப் பேசுவது எனவும் அப்போது எண்ணிக்கை முடிவு காணப்பட்டு, தொகுதிகளை அடையாளம் காண வேண்டும் என்று கூறப்பட்டதாகத் தெரிகிறது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

இன்று அல்லது நாளை பாஜக-அதிமுக ஒன்றுகூடி மீண்டும் ஆலோசனை நடத்தும் என்று கூறப்படுகிறது. மேலும், உடன் இருக்கும் மற்ற கட்சிகளுக்கும் கேட்பதை தர முடியாவிட்டாலும் ஓரளவு பலம் வாய்ந்த கூட்டணியாக உருவாக கணிசமான சீட்டுகளை ஒதுக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories