நேற்று செய்தி வெளியானது; இன்று பஸ்ஸில் ஏணி கழற்றப் பட்டது!
இந்த நிலையில் உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள், சம்பந்தப் பட்ட தனியார் பஸ் உரிமையாளரிடம் எச்சரிக்கை செய்தனர். இதை அடுத்து, அந்த பேருந்தின் ஏணி கழற்றி வீசப்பட்டது. இனி மாணவர்கள் இது போல் ஏணியில் தொங்கிக் கொண்டு வர இயலாது.
இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது
இந்த தாமிரபரணி அகத்தியரால் தனித்தன்மை பெற்று, தென்னாட்டிற்கு உயிர் கொடுத்து கொண்டு வருகின்றது. இத்தகு சிறப்பு மிக்க தாமிரபரணியில் புஷ்கரம் பூசை செய்ய உள்ளார்கள். இதனை தாமிரபரணி புஷ்கரம் என்றும் கூறுவார்கள். அதென்ன புஷ்கரம்?
அபிராமி கணவருக்கு ரஜினி மக்கள் மன்ற பதவி: நிர்வாகிகள் வரவேற்பு!
சென்னை: தனது இரு குழந்தைகளை கள்ளக்காதலன் சொல்படி கேட்டு விஷம் கொடுத்துக் கொன்ற அபிராமியின் கணவன் விஜய்க்கு மக்கள் மன்றத்தில் ஒரு பதவியைக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். அதற்கு மக்கள் மன்ற நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அரசுப் பேருந்தில் அரிசிக் கடத்தல்!
அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட சுமார் 20 மூட்டை ரேசன் அரிசி, செங்கோட்டை பேரூந்து நிலையத்தில் சிவில் சப்ளை தாசில்தார் அழகப்ப ராஜா நடத்திய சோதனையின் போது பிடி பட்டது.
திமுக.,வுக்கு மு.க.அழகிரி விட்டுள்ள சாபம்!
தொடர்ந்து இந்த ஒன்றரை லட்சம் பேரையும் கட்சியை விட்டு நீக்கிட முடியுமா என்றும் கேள்விக் கணை தொடுத்தார். எதற்கும் அசைந்து கொடுக்காமல், பதிலுக்கு மு.க.ஸ்டாலின் அதே போன்று சமாதி தியானம் செய்ய கருணாநிதியின் சமாதியை நோக்கி நடை போட்டார்.
தாமிரபரணி மகாபுஷ்கரம் 2018: ஆன்மிகத் தகவல்கள்!
மகாபுஷ்கர தினங்களில் (11.10.2018 முதல் 22.10.2018 வரை) தாமிரபரணி மகாத்மிய பாராயணம், சதுர்வேத பாராயணம், நாலாயிர திவ்யப் ப்ரபந்தம், பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம், பன்னிருதிருமுறைகள், திருவருட்பா, திருப்புகழ், சகஸ்ரநாம பாராயணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஹெல்மெட் விழிப்பு உணர்வு பேரணி: போலீஸார் பங்கேற்பு
நீதிபதி நிலவரசன் இந்தப் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் பங்கேற்று ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை எடுத்துக் கூறினர்.
ஆவணித் திருவிழா திருச்செந்தூரில் நாளை தேரோட்டம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது.
சோபியா விவகாரம்: ஸ்டாலினுக்கு பாஜக., கடும் கண்டனம்! கரூரில் ஆர்ப்பாட்டம்!
இந்த பிரச்னை, எதிர்கட்சியினரால் வேண்டுமென்றே திட்டமிட்டு, தூண்டப் படுகின்றதாகவும், அதற்கு கண்டனம் தெரிவித்தும், கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
கோபாலபுரத்தில் பிரணாப் முகர்ஜி: கருணாநிதி படத்துக்கு மலர் வைத்து அஞ்சலி
கருணாநிதி மறைவையொட்டி இன்று கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு பூங்கொத்து வைத்து மரியாதை செலுத்தினார். உடன் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்....
ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விவகாரம்: இவ்வளவு ஆர்ப்பாட்டம் ஏன்? கொண்டாட என்ன இருக்கிறது?
எனவே ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விஷயத்தில் புதிதாக எந்த மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை! நேற்றைய நிலை தான் இப்போதும் தொடர்கிறது!
படியில் மட்டுமல்ல.. ஏணியில் தொங்கியும்கூட சாகசப் பயணம்!
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை வட்டாரத்தை சோ்ந்த பங்களாசுரண்டை பேரன்புருக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்தான் இப்படி தொங்கிக் கொண்டு பயணிப்பது. மாணவர்களின் உயிரோடு விளையாடும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.