February 21, 2026, 4:05 PM
30.4 C
Chennai

ரூ.15 ஆயிரம் லஞ்சம்: கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரி உள்பட இருவர் கைது

krishnagiri rupees - 2026

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்பட 2 பேரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி டி.பி. ரோட்டைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், இவர் வெல்லம்மண்டி கடை வைத்துள்ளார். இவர் கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட மைய நூலகம் எதிரில் உள்ள ஊரக வளர்ச்சி திட்ட முகமைக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள கடையை வாடகைக்குக் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

அந்தக் கடையை வாடகைக்கு பெற்றுத் தருவதாகவும், அதற்காக ரூ.15 ஆயிரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மனுக்கு லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்றும் அந்த அலுவலகத்தின் பதிவு எழுத்தராகப் பணியாற்றி வந்த சத்தியமூர்த்தி என்பவர், ஜெயக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

லஞ்சப் பணத்தை கொடுக்க விரும்பாத ஜெயக்குமார், இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி ரசாயன பொடி தடவப்பட்ட ரூ.15 ஆயிரத்தை கொடுப்பதற்காக ஜெயக்குமார்  மாலை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு சென்று, லஞ்ச பணத்தை பதிவு எழுத்தர் சத்தியமூர்த்தியிடம் கொடுத்தார். பின்னர் அவர் அந்தப் பணத்தை திட்ட இயக்குநர் நரசிம்மனிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கே மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு  துறையினர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், பதிவு எழுத்தர் சத்தியமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories