பந்த் அன்று பால் முகவர்களுக்கு பாதுகாப்பு தேவை

aavin milk - 2026

பால் முகவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடுங்கள் என்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை (10.09.2018) அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுக, கம்யூனிஸ்ட்உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையும் ஆதரவு தெரிவித்திருந்தாலும் கூட *பொதுமக்கள் நலன் கருதி இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஆதரவளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளைய தினம் பொதுமக்களுக்கு பால் தங்கு தடையின்றி விநியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்திருப்பதால் அக்கட்சிகளைச் சார்ந்த வட்டம், பகுதி பிரதிநிதிகள் நாளைய தினம் பால் முகவர்களையும், வணிகர்களையும் கடைகளை அடைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தலாம். கடைகளை அடைக்க மறுக்கும் பால் முகவர்கள், வணிகர்கள் தாக்கப்படும் சூழல் ஏற்படும் என்கிற எண்ணம் பெரும்பாலான வணிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

எனவே நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் போது தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் பாலினை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்திட ஏதுவாக அவர்களின் விநியோக மையங்களுக்கும், பாலினை விநியோகம் செய்கின்ற வாகனங்களுக்கும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிடுமாறு தமிழக அரசையும், தமிழக காவல்துறை தலைவர் மற்றும் காவல் ஆணையாளர் ஆகியோரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் நாளைய தினம் தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி பாலினை விநியோகம் செய்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து பொதுமக்களுக்கு பால் உரிய நேரத்தில், தடையின்றி கிடைப்பதை பால் முகவர்கள் அனைவரும் உறுதி செய்யுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதோடு பால் முகவர்கள் அனைவருக்கும் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்… என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories