பந்த் அன்று பால் முகவர்களுக்கு பாதுகாப்பு தேவை

aavin milk - 2026

பால் முகவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடுங்கள் என்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை (10.09.2018) அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுக, கம்யூனிஸ்ட்உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையும் ஆதரவு தெரிவித்திருந்தாலும் கூட *பொதுமக்கள் நலன் கருதி இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஆதரவளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளைய தினம் பொதுமக்களுக்கு பால் தங்கு தடையின்றி விநியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்திருப்பதால் அக்கட்சிகளைச் சார்ந்த வட்டம், பகுதி பிரதிநிதிகள் நாளைய தினம் பால் முகவர்களையும், வணிகர்களையும் கடைகளை அடைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தலாம். கடைகளை அடைக்க மறுக்கும் பால் முகவர்கள், வணிகர்கள் தாக்கப்படும் சூழல் ஏற்படும் என்கிற எண்ணம் பெரும்பாலான வணிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

ALSO READ:  விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

எனவே நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் போது தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் பாலினை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்திட ஏதுவாக அவர்களின் விநியோக மையங்களுக்கும், பாலினை விநியோகம் செய்கின்ற வாகனங்களுக்கும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிடுமாறு தமிழக அரசையும், தமிழக காவல்துறை தலைவர் மற்றும் காவல் ஆணையாளர் ஆகியோரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் நாளைய தினம் தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி பாலினை விநியோகம் செய்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து பொதுமக்களுக்கு பால் உரிய நேரத்தில், தடையின்றி கிடைப்பதை பால் முகவர்கள் அனைவரும் உறுதி செய்யுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதோடு பால் முகவர்கள் அனைவருக்கும் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்… என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories