December 6, 2025, 3:08 AM
24.9 C
Chennai

பந்த் அன்று பால் முகவர்களுக்கு பாதுகாப்பு தேவை

aavin milk - 2025

பால் முகவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடுங்கள் என்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை (10.09.2018) அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுக, கம்யூனிஸ்ட்உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையும் ஆதரவு தெரிவித்திருந்தாலும் கூட *பொதுமக்கள் நலன் கருதி இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஆதரவளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளைய தினம் பொதுமக்களுக்கு பால் தங்கு தடையின்றி விநியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்திருப்பதால் அக்கட்சிகளைச் சார்ந்த வட்டம், பகுதி பிரதிநிதிகள் நாளைய தினம் பால் முகவர்களையும், வணிகர்களையும் கடைகளை அடைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தலாம். கடைகளை அடைக்க மறுக்கும் பால் முகவர்கள், வணிகர்கள் தாக்கப்படும் சூழல் ஏற்படும் என்கிற எண்ணம் பெரும்பாலான வணிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

எனவே நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் போது தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் பாலினை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்திட ஏதுவாக அவர்களின் விநியோக மையங்களுக்கும், பாலினை விநியோகம் செய்கின்ற வாகனங்களுக்கும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிடுமாறு தமிழக அரசையும், தமிழக காவல்துறை தலைவர் மற்றும் காவல் ஆணையாளர் ஆகியோரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் நாளைய தினம் தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி பாலினை விநியோகம் செய்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து பொதுமக்களுக்கு பால் உரிய நேரத்தில், தடையின்றி கிடைப்பதை பால் முகவர்கள் அனைவரும் உறுதி செய்யுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதோடு பால் முகவர்கள் அனைவருக்கும் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்… என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories