பந்த் அன்று பால் முகவர்களுக்கு பாதுகாப்பு தேவை

aavin milk - 2026

பால் முகவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடுங்கள் என்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை (10.09.2018) அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுக, கம்யூனிஸ்ட்உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையும் ஆதரவு தெரிவித்திருந்தாலும் கூட *பொதுமக்கள் நலன் கருதி இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஆதரவளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளைய தினம் பொதுமக்களுக்கு பால் தங்கு தடையின்றி விநியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்திருப்பதால் அக்கட்சிகளைச் சார்ந்த வட்டம், பகுதி பிரதிநிதிகள் நாளைய தினம் பால் முகவர்களையும், வணிகர்களையும் கடைகளை அடைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தலாம். கடைகளை அடைக்க மறுக்கும் பால் முகவர்கள், வணிகர்கள் தாக்கப்படும் சூழல் ஏற்படும் என்கிற எண்ணம் பெரும்பாலான வணிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

எனவே நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் போது தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் பாலினை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்திட ஏதுவாக அவர்களின் விநியோக மையங்களுக்கும், பாலினை விநியோகம் செய்கின்ற வாகனங்களுக்கும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிடுமாறு தமிழக அரசையும், தமிழக காவல்துறை தலைவர் மற்றும் காவல் ஆணையாளர் ஆகியோரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் நாளைய தினம் தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி பாலினை விநியோகம் செய்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து பொதுமக்களுக்கு பால் உரிய நேரத்தில், தடையின்றி கிடைப்பதை பால் முகவர்கள் அனைவரும் உறுதி செய்யுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதோடு பால் முகவர்கள் அனைவருக்கும் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்… என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories