
பண்ருட்டி: மாரியம்மனுக்கு மேரியம்மா அலங்காரம் செய்யப் பட்டதால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் அருகில் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலையை ஆரோக்கியமாதா உருவத்தில் அலங்காரம் செய்துதுள்ளனர். இதனால் ஹிந்து சமுதாயத்தை சேர்ந்த பலர் இதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
முன்னதாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை சேர்ந்த அடிகளார் இதேபோன்று மேல்மருவத்தூர் அம்மனுக்கு மேரி மாதா வடிவத்தில் அலங்காரம் செய்து அவரது கையில் குழந்தையாக இயேசு பொம்மையை வைத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அவரது சித்தர் பீடத்தைச் சேர்ந்த சிலர் இது போன்று அலங்காரம் செய்வது பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ளது.

