
கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள ராகி முத்தஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜு.
விவாசயி இவருக்கு அனில் என்ற மகன் உள்ளார். அனில், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

அனிலுக்கும், வீணா என்ற பெண்ணிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
அனிலும், அவரது மனைவியும், தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்திருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மகன் வேலைக்கு சென்ற பிறகு நாகராஜு அவரது மருமகள் வீணாவிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை வழக்காமாக செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அரை குறை ஆடையுடன் ஆபாசமாக நின்றுக்கொண்டு, அத்துமீறியிருக்கிறார்.
இந்நிலையில் சம்பவதன்றும், நாகராஜு, வீணாவிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார்.
இதனால் பதற்றம் அடைந்த வீணா சத்தம் போட்டுள்ளார்.
வீணாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் ஓடி வந்துள்ளார். இதனால் பதறிபோன நாகராஜு, மருமகள் வீணாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நாகராஜை கைது செய்தனர்.

காம இச்சைக்காக மருமகளை, மாமனாரே சீரழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.