திருப்பதி லட்டு… டபுள் மடங்கு ரேட்டு ஏறுது! பக்தர்கள் அதிர்ச்சி!

Published:

tiruppati Laddu - 2026
திருமலை திருப்பதியில் வழங்கப்பெறும் லட்டு பிரசாதம்…

திருப்பதி திருமலை வரும் பக்தர்களுக்கு அதிர்ச்சி அளிக்கப் போகிறது, ஸ்ரீவாரி லட்டு விலை உயர்வு விவகாரம்!

திருமலையில் ஸ்ரீவாரி லட்டு விலை இரட்டிப்பாக அதிகரிக்க உள்ளது. இதுவரை உள்ள சலுகை விலை அனைத்தையும் ரத்து செய்யப் போகிறது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

இலவச தரிசனம், 300 ரூபாய் தரிசனம், விஐபி பிரேக் தரிசன பக்தர்கள்… போன்றவர்களுக்கு அளிக்கும் சலுகைகளை ரத்து செய்வதன் மூலம் லட்டு விற்பனையில் வரும் நஷ்டத்தை ஈடுகட்ட முடிவெடுத்துள்ளது.

பக்தர்கள் அனைவருக்கும் 160 – 180 கிராம் சின்ன லட்டு இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் விரும்புகிறது. அதற்கு மேல் ஒவ்வொரு லட்டுவும் 50 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறது.

திருமலா திருப்பதி தேவஸ்தானம் மற்றுமொரு முக்கியமான முடிவு எடுக்க உள்ளது. இனி ஸ்ரீவாரி லட்டுவை அதிக விலைக்கு விற்க வேண்டும் என்ற யோசனையில் உள்ளது. லட்டு விநியோகம் விற்பனை இரண்டிலும் தள்ளுபடிகளை ரத்து செய்ய வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டம் தயாரித்து வருகிறது.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!
laddu thirupathi - 2026

இனி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக 160- 180 கிராம் சின்ன லட்டு கிடைக்கும். அதன்பின்பு லட்டு ஒன்று ரூ.50 க்கு விற்கப்பட உள்ளது.

சந்தை விலையின் படி ஒரு லட்டு செய்வதற்கு சுமார் 40 ரூபாய் செலவாகிறது. அதன் மீது பக்தர்களுக்கு தள்ளுபடி செய்து விற்பதால் அதிக நஷ்டம் ஏற்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி செவ்வாயன்று அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.

thirupathi laddu - 2026

அப்போது, இது குறித்து அனைவரும் ஒருமுகமாக கருத்து தெரிவித்தனர். எனவே இது குறித்து எடுத்த முடிவுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

லட்டு விலை தள்ளுபடியால் ஒவ்வோர் ஆண்டும் ரூ.2412 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான கணக்கெடுப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img