பிச்சைக்காரரை சாதாரண மனிதராக மாற்றிய எஸ்.பி., குவியும் பாராட்டுகள்!

Published:

begger in tirupati - 2026

எஸ்பி க்கு குவிந்த பாராட்டுக்கள். திருப்பதி அர்பன் எஸ்பி.,யின் மனிதாபிமானம். மலர்ந்த சேவை குணம். பிச்சைக்காரனை மனிதனாக மாற்றிய கருணை.

திருப்பதி அர்பன் எஸ்பி செய்த செயலால் பாராட்டுகள் வந்து குவிகின்றன. அவருக்கு அதிகாரம் பெரிய தில்லை. நான் பிறர் என்ற வேறுபாடு இல்லை. இருப்பதெல்லாம் ஒன்றுதான். அது சேவை மனப்பான்மை. அதுவே அவருடைய மதமாக உள்ளது.

ஆன்மீக நகரமான திருப்பதியில் யாரும் இல்லாத ஒரு அனாதை பிச்சைக்காரர் நடை பாதை மீது உண்டு உறங்கி வாழ்ந்து வந்தார் . திருப்பதி அர்பன் எஸ்பி அலுவலகம் முன்பே அவர் படுத்துக் கொண்டிருப்பது வழக்கம்.

தினமும் அந்த வழியே எத்தனையோ பேர் போய் வந்தாலும் யாருமே கண்டு கொண்டதில்லை.

begger in tirupati 1 - 2026

அவருடைய நிலைமையைப் பார்த்து திருப்பதி எஸ்பி ஆவுல ரமேஷ் ரெட்டி தன் பதவியையும் ஹோதாவையும் பெரிதாக எண்ணாமல் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்த பிச்சைக்காரர் அருகில் சென்று விசாரித்தார். அவருடைய நலனை தெரிந்துகொண்டு அவரை சாதாரண மனிதராக ஆக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

வெஸ்ட் சிஐ தலைமையில் பிச்சைக்காரருக்கு தலைமுடியை கத்தரித்து புது ஆடைகள் அணிவித்து வயிறு நிறைய சாப்பாடு கொடுத்து மருத்துவ உதவியளித்து ஆசிரமத்தில் கொண்டு சேர்த்தார்.

ஒவ்வொருவரும் ஒரு வேளையாவது அனாதைகளுக்கு அன்னம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அவருடைய இந்த சேவை மனப்பான்மையைப் பார்த்து போலீசார்கள் தாங்களும் அதே வழியில் நடப்போம் என்று தெரிவித்தார்கள்.

மனநிலை சற்று சரி இல்லாத அந்த பிச்சைக்காரரை இவ்வாறு சேவை குணத்தோடு ஆதரவளித்த எஸ்பிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img