அராஜக அய்யாக்கண்ணுவிடம் ‘பாசம்’ காட்டும் ஊடகங்கள்!: நடந்தது என்ன? நெல்லையம்மாள் விளக்கம்!

ayyakkannu temple protest - 2026

சென்னை:

தமிழகத்தில் அண்மைக் காலமாக காட்சி ஊடகங்கள் ஒரு சார்பாகவே செயல்பட்டு வருவதை தமிழக மக்கள் கண்டு வருகிறார்கள். கட்சிக்கு ஒரு ஊடகம் வைத்துக் கொண்டிருந்த நிலை போய், இப்போது கட்சிகளே ஊடகங்களை விலைக்கு வாங்கி விட்டனவோ என்றபடி, எரிச்சலூட்டும் வகையில் செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள் பொதுமக்கள்.

இதை உண்மையாக்கும் விதத்தில், திருச்செந்தூரில் நேற்று நிகழ்ந்த ஒரு நிகழ்வு உறுதி செய்திருக்கிறது.

பிரதமர் மோடியைக் குறித்து அவதூறு கிளப்பும் வகையில் துண்டுப் பிரசுரங்களை எடுத்து விநியோகித்துள்ளார் விவசாயிகள் சங்க நிர்வாகி அய்யாக்கண்ணு. அப்போது உள்ளூர் பாஜக., நிர்வாகி நெல்லையம்மாள் என்பவர், அவரைத் தடுத்து, கோயிலுக்குள் எப்படி நோட்டீஸ் கொடுக்கலாம் என்று கேள்வி கேட்டுள்ளார். அப்போது அவர், அய்யாக்கண்ணு வலுவில் திணித்த நோட்டீஸை பெற்றுக் கொள்ளாமல் தவிர்த்துச் சென்ற பெண்களை அழைத்து நோட்டீஸ் கொடுக்க, இவர் ஒரு ஃபிராடு, அவர்கிட்ட நோட்டீஸ் வாங்காதீங்க என்று கூறுகிறார் நெல்லையம்மாள்.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

உடனே ஆத்திரப்பட்ட அய்யாக்கண்ணு, நெல்லையம்மாளை அடிக்க நாக்கைத் துருத்திக் கொண்டு அடிக்கக் கையை ஓங்குகிறார்… ஆனால் நெல்லையம்மாளும் பதிலுக்கு கையை ஓங்கியுள்ளார். இதனை வீடியோ காட்சிகள் நன்கு தெளிவாக்குகின்றன. இதில், நெல்லையம்மாள் அந்த நோட்டீஸை வாங்காதீங்க, பிராடு என்றுதான் சொன்னாரே ஒழிய, அய்யாக்கண்ணுவை அடிக்கப் பாயவில்லை.

முதலில் அடிக்க கையை ஓங்கியது, ஆணாதிக்கத்தையும் திமிர்த்தனத்தையும் ஒருங்கே கொண்ட அய்யாக்கண்ணுதானே தவிர, நெல்லையம்மாள் இல்லை என்கிறார்கள் அந்தச் சம்பவத்தைப் பார்த்தவர்கள். ஆனால், அய்யாக்கண்ணுவுக்கு ‘விவசாயி’ என்ற பாசத்தைக் கொட்டி பாராட்டி சீராட்டும் ஊடகங்கள், அய்யாக்கண்ணுவைத்தான் அந்தப் பெண் அடித்து விட்டார் என்ற வகையில் செய்தியைப் பரப்பின. .

ஆனால் அது உண்மையில்லை என்று கூறி வாட்ஸ் அப் மூலம் தகவல் வெளியிட்டுள்ளார் நெல்லையம்மாள். அய்யாக்கண்ணுவுடன் வந்த குண்டர்கள் தன்னைத் தாக்கியதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்ததாகக் கூறி, தனது புகார் மனுவை போலீஸார் வாங்க மறுத்துவிட்டார்கள் என்று கூறி நெல்லையம்மாள் கூறும் தகவல் இது…

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories