23-03-2023 5:32 PM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிக கேள்வி-பதில்: ராமன் அவதார புருஷன் என்பது கோசலைக்குத் தெரியாதா?

    To Read in other Indian Languages…

    ஆன்மிக கேள்வி-பதில்: ராமன் அவதார புருஷன் என்பது கோசலைக்குத் தெரியாதா?

    srirama - Dhinasari Tamil

    கேள்வி:- ராமன் வன வாசத்திற்குச் செல்லும்போது சுமித்ரா, “ராமன் அவதார புருஷன். சிறிதும் கவலை கொள்ளாதே!” என்று கௌசல்யாவை சமாதானப் படுத்துகிறாள். இந்த ஞானம், ராமனைப் பெற்ற தாயான கௌசல்யாவுக்குத் தெரியாதா?

    samavedam 1 - Dhinasari Tamil

    பதில்:-
    “ராம: பித்ரோ: புத்ரபாவம் ராவணாய மனுஷ்யதாம்
    ருஷீணாம் பகவத்பாவம் தர்சயன் விசசாரஹ”
    -“ராமன் தாய் தந்தையருக்குப் புத்ரனைப் போல, ராவணனுக்கு சாமானிய மனிதனைப் போல, ருஷிகளுக்குத் தன் உண்மை சொரூபமான தெய்வம் போல தென்பட்டு நடந்து கொண்டான்” என்பது பரத்வாஜ ராமாயண வசனம்.

    கௌசல்யா, தசரதர் இவர்களின் பார்வையில் ராமன் அவர்களின் புதல்வன். அந்த பாவனையோடு உய்வடைந்த புண்ணிய பலன் அவர்களுடையது. நந்தகோபனும் யசோதையும் ஸ்ரீகிருஷ்ணனை தம் புதல்வனாகவே பாவனை செய்து உய்வடைந்தார்கள். தாற்காலிகமாக விஸ்வரூபத்தை காட்டினாலும் உடனே யோக மாயையின் பிரபாவத்தால் குழந்தை போலவே பிரமிக்கச் செய்தான். அந்த மாயையையே ராமாவதாரத்தில் கூட நிகழ்த்தி தன் அவதார காரியத்தை நிறைவேற்றிக் கொண்டான்.

    அந்த காரணத்தால்தான் பெற்ற தாயான கௌசல்யாவுக்கு ராமன் அவதார புருஷன் என்று கிரகிக்க இயலவில்லை. ராமாயணத்தின்படி பார்த்தால் சுமித்ரா தத்துவ ஞானம் கொண்டவள். வால்மீகி ராமாயணத்தில் சுமித்ராவின் கதாபாத்திரம் அதிகம் வெளிப்படாவிடினும் கௌசல்யாவிடம் அவள் கூறிய சொற்களின்படி பார்த்தால் ராம தத்துவம் புரிந்தவளாக அறிய முடிகிறது. சில வியாக்கியான கர்த்தாக்களின் அபிப்பிராயப்படி சுமித்ரா உபாசனை தர்மத்திற்கு சங்கேதமாக கூறப்படுகிறாள். அதனால்தான் கைங்கர்ய சுபாவம் கொண்ட லட்சுமணன் அவளுக்குப் புதல்வனாகப் பிறந்தான்.

    ***

    ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…

    தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
    (ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    3 × 2 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,630FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...