December 5, 2025, 4:57 PM
27.9 C
Chennai

ஆன்மிக கேள்வி-பதில்: ராமன் அவதார புருஷன் என்பது கோசலைக்குத் தெரியாதா?

srirama - 2025

கேள்வி:- ராமன் வன வாசத்திற்குச் செல்லும்போது சுமித்ரா, “ராமன் அவதார புருஷன். சிறிதும் கவலை கொள்ளாதே!” என்று கௌசல்யாவை சமாதானப் படுத்துகிறாள். இந்த ஞானம், ராமனைப் பெற்ற தாயான கௌசல்யாவுக்குத் தெரியாதா?

samavedam 1 - 2025

பதில்:-
“ராம: பித்ரோ: புத்ரபாவம் ராவணாய மனுஷ்யதாம்
ருஷீணாம் பகவத்பாவம் தர்சயன் விசசாரஹ”
-“ராமன் தாய் தந்தையருக்குப் புத்ரனைப் போல, ராவணனுக்கு சாமானிய மனிதனைப் போல, ருஷிகளுக்குத் தன் உண்மை சொரூபமான தெய்வம் போல தென்பட்டு நடந்து கொண்டான்” என்பது பரத்வாஜ ராமாயண வசனம்.

கௌசல்யா, தசரதர் இவர்களின் பார்வையில் ராமன் அவர்களின் புதல்வன். அந்த பாவனையோடு உய்வடைந்த புண்ணிய பலன் அவர்களுடையது. நந்தகோபனும் யசோதையும் ஸ்ரீகிருஷ்ணனை தம் புதல்வனாகவே பாவனை செய்து உய்வடைந்தார்கள். தாற்காலிகமாக விஸ்வரூபத்தை காட்டினாலும் உடனே யோக மாயையின் பிரபாவத்தால் குழந்தை போலவே பிரமிக்கச் செய்தான். அந்த மாயையையே ராமாவதாரத்தில் கூட நிகழ்த்தி தன் அவதார காரியத்தை நிறைவேற்றிக் கொண்டான்.

அந்த காரணத்தால்தான் பெற்ற தாயான கௌசல்யாவுக்கு ராமன் அவதார புருஷன் என்று கிரகிக்க இயலவில்லை. ராமாயணத்தின்படி பார்த்தால் சுமித்ரா தத்துவ ஞானம் கொண்டவள். வால்மீகி ராமாயணத்தில் சுமித்ராவின் கதாபாத்திரம் அதிகம் வெளிப்படாவிடினும் கௌசல்யாவிடம் அவள் கூறிய சொற்களின்படி பார்த்தால் ராம தத்துவம் புரிந்தவளாக அறிய முடிகிறது. சில வியாக்கியான கர்த்தாக்களின் அபிப்பிராயப்படி சுமித்ரா உபாசனை தர்மத்திற்கு சங்கேதமாக கூறப்படுகிறாள். அதனால்தான் கைங்கர்ய சுபாவம் கொண்ட லட்சுமணன் அவளுக்குப் புதல்வனாகப் பிறந்தான்.

***

ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…

தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories